காணாமல்போனோர் விவகாரத்திற்கு சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் ஊடாகத் தீர்வைப் பெற்றுத்தருமாறு இம்முறையும் வலியுறுத்துவோம்

Published By: J.G.Stephan

25 Jan, 2021 | 05:29 PM
image

(நா.தனுஜா)
ஜெனீவாவில் எதிர்வரும் பெப்ரவரி மாதம் ஆரம்பமாகவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 46 ஆவது கூட்டத்தொடரில் கலந்து கொள்வதற்காக தமது அமைப்பின் சார்பில் குறைந்தபட்சம் மூவரை அனுப்பி வைப்பதற்குத் திட்டமிட்டிருப்பதாக வடக்கு, கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கம் அறிவித்துள்ளது.

காணாமல்போனோர் விவகாரத்திற்கு சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் ஊடாகத் தீர்வைப் பெற்றுத்தருமாறு இம்முறையும் ஜெனிவாவில் வலியுறுத்தவிருப்பதாகவும் சங்கத்தின் செயலாளர் நீலாதேவி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:

வலிந்து காணாமலாக்கப்பட்ட எமது உறவுகளுக்கு என்ன நேர்ந்தது என்பதைக் கண்டறிவதற்கு சர்வதேச குற்றவியல் நீதிமன்றமொன்று நிறுவப்பட்டு, அதனூடாக விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென்று நாம் தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்திருக்கிறோம். அதேவேளை காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்தையும் அதன் செயற்பாடுகளையும் நாம் ஏற்றுக்கொள்ளவில்லை.

இந்நிலையில் எதிர்வரும் பெப்ரவரி மாதம் ஜெனிவாவில் ஆரம்பமாகவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 46 ஆவது கூட்டத்தொடரில் கலந்துகொள்வதற்காக வடக்கு, கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தின் சார்பில் குறைந்தபட்சம் மூவரையேனும் அனுப்பிவைப்பதற்குத் திட்டமிட்டிருக்கிறோம்.

ஏற்கனவே மூன்று தமிழ் அரசியல் கட்சிகள் இணைந்து கூட்டாகக் கையெழுத்திட்டு மனித உரிமைகள் பேரவைக்குக் கடிதமொன்றை அனுப்பிவைத்தன. அந்தக் கடிதத்தில் எமது கோரிக்கைகளும் உள்ளடக்கப்பட்டுள்ளன. எமது கோரிக்கைகளின் முன்னாள் தமிழ் அரசியல் கட்சிகளால் பிரிந்து நின்று செயற்பட முடியாத நிலையேற்பட்டது. எனவே அவர்களும் ஒருமித்துக் கையெழுத்திட்டமை அரசியல் தீர்வொன்றை அடைந்துகொள்வதற்கான பயணத்தில் குறிப்பிடத்தக்க சாதனையாகவே பார்க்கப்பட வேண்டும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55