இலங்கையில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 283ஆக அதிகரித்துள்ளது.
இறுதியாக 3 கொரோனா உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவிக்கின்றது.
கொழும்பு 14, மருதானை மற்றும் பூஜாப்பிட்டி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 3 பெண்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். இவ்வாறு உயிரிழந்தவர்கள் 77, 84 மற்றும் 65 வயதானவர்கள் என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நாட்டில் கொவிட் - 19 தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை 58 000 ஐ அண்மித்துள்ள அதே வேளை கடந்த சில தினங்களாக 25 மாவட்டங்களிலும் தொற்றாளர்கள் இனங்காணப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
ஆரம்பத்தில் அபாயமுடைய பகுதியாக அடையாளப்படுத்தப்பட்டிருந்த மேல் மாகாணத்தில் தற்போது தொற்றாளர்கள் இனங்காணப்படும் அளவு 50 வீதம் குறைவடைந்துள்ள போதிலும், ஏனைய மாகாணங்களில் அபாயம் அதிகரித்து வருவதாக சுகாதார தரப்புக்கள் எச்சரித்துள்ளன.
அதற்கமைய நேற்று ஞாயிற்றுக்கிழமை 25 மாவட்டங்களிலும் 843 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக கொவிட் தடுப்பிற்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.
கொழும்பிலேயே அதிகளவான தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். இம்மாவட்டத்தில் 197 தொற்றாளர்களும் அதற்கு அடுத்தபடியாக கண்டியில் 110 தொற்றாளர்களும் , கம்பஹாவில் 106 தொற்றாளர்களும் இனங்காணப்பட்டுள்ளனர்.
இதேவேளை குருணாகலில் 40, காலியில் 38, இரத்தினபுரியில் 31, களுத்துறையில் 28, மாத்தளையில் 27, கேகாலையில் 24, மாத்தறையில் 22, புத்தளத்தில் 21, மன்னாரில் 15, அம்பாறையில் 13, அம்பாந்தோட்டையில் 12, வவுனியாவில் 9, நுவரெலியா மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களில் தலா 7, பதுளை மற்றும் யாழ்ப்பாணத்தில் தலா 4, திருகோணமலையில் 3, மொனராகலையில் 2, அநுராதபுரம் , கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களில் தலா ஒவ்வொன்று என 25 மாவட்டங்களிலும் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை 843 புதிய தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர். அதற்கமைய நாட்டில் மொத்த தொற்றாளர் எண்ணிக்கை 58430 ஆக உயர்வடைந்துள்ளது.
இவர்களில் 49 684 தொற்றாளர்கள் குணமடைந்துள்ளதோடு , 8463 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
இதே வேளை கொவிட் மரணங்களின் எண்ணிக்கை 283 ஆக உயர்வடைந்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM