மேல்மாகாணத்தில் மீண்டும் விசேட கண்காணிப்பு - அஜித் ரோஹண

Published By: Digital Desk 4

24 Jan, 2021 | 04:50 PM
image

(செ.தேன்மொழி)

மேல்மாகாணத்தில் எதிர்வரும் தினங்களில் தனிமைப்படுத்தல் விதிமுறைகள் கடைபிடிக்கப்படுகின்றதா என்பது தொடர்பில் விசேட கண்காணிப்பு நடவடிக்கைகள் இடம்பெறவுள்ளதுடன், உடனடி அன்டிஜன் பரிசோதனைகளும் முன்னெடுக்கப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

இதேவேளை பாடசாலை மாணவர்களை அழைத்துச் செல்லும் வாகனங்கள் தொடர்பிலும் விசேட கண்காணிப்பு நடவடிக்கைகள் இடம் பெற்று வருவதுடன் ,பாடசாலை வாகன சாரதிகளுக்கு  அன்டிஜன் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதுத் தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது ,

மேல்மாகாணத்தின் பல பகுதிகளில் விசேட சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்ட்டு வருகின்றன. இதன்போது தனிமைப்படுத்தல் மற்றும் நோய்த்தடுப்பு சட்டவிதிகள் கடைப்பிடிக்கப்படுகின்றதா என்பது தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை மேல்மாகாணத்தில் மக்கள் நடமாட்டம் அதிகமான பகுதிகளில் உடனடி அன்டிஜன் பரிசோதனைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், நாளை திங்கட்கிழமை தொடக்கம் மேல்மாகாணத்தில் பாடசாலைகள் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளதால், பாடசாலை மாணவர்களை அழைத்துச் செல்லும் வாகனங்கள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்படவுள்ளன.

அதற்கமைய மாணவர்களை அழைத்துச் செல்லும்  வாகனங்களில் தனிமைப்படுத்தல் சட்டவிதிகள் கடைப்பிடிக்கப்படுகின்றதா என்பது தொடர்பில் அவதானிக்கபடவுள்ளதுடன், பாடசாலை மாணவர்களை அழைத்துச் செல்லும் வாகன சாரதிகள் மற்றும் சாரதி உதவியாலாளர்களுக்கு அன்டிஜன் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.  

இதேவேளை,  மேல்மாகாணத்தை தவிர நாட்டின் ஏனைய பகுதிகளில் இன்று காலை ஆறு மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலயத்திற்குள் முகக்கவசம் அணியாமை தொடர்பில் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

அதற்கமைய கடந்த வருடம் அக்டோபர் மாதம் 30 ஆம் திகதி முதல் இது வரையில் 2734 பேர் கைது செய்யப்பட்டள்ளனர். இவர்களுள் 2600 பேருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளது.

அதற்கமைய தனிமைப்படுத்தல் சட்டவிதிகளுக்கு புறம்பாக செயற்படும் நபர்கள் மற்றுமன்றி அதற்கு உதவி ஒத்தாசைகளை வழங்குபவர்களுக்கும் , கொரோனா வைரஸ் பரவல் காரணமாக மேற்கொள்ளப்படும் உடனடி செயற்பாடுகளுக்கு இடையூறு செய்பவர்களுக்கு எதிராகவும் சட்டநடவடிக்கை எடுக்கப்படும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை கிரிக்கெட்டை உலகில் தலைசிறந்ததாக மீண்டும்...

2024-03-29 20:09:53
news-image

தண்டனைச்சட்டக்கோவையின் 363, 364 ஆம் பிரிவுகளைத்...

2024-03-29 19:35:09
news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08