காலஞ்சென்ற சிரேஷ்ட ஊடகவியலாளர் கலாநிதி எட்வின் ஆரியதாஸவின் இறுதி கிரியைகளை அரச செலவில் முன்னெடுக்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆலோசனை வழங்கியுள்ளார். இவரது இழப்பு ஊடகத்துறை மற்றும் சினிமாத்துறைக்கு பேரிழப்பாக கருதப்படும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார்.
ஊடகவியலாளர் கலாநிதி எட்வின் ஆரியதாஸ தனது 98ஆவது வயதில் நேற்று முன்தினம் காலமானார். பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, 1922 டிசெம்பர் மாதம் 3ஆம் திகதி காலி உனவடுன பகுதியில் பிறந்த எட்வின் ஆரியதாஸ தனது ஆரம்ப கல்வியை உனவடுவ பொனவிஸ்டா பாடசாலையிலும், காலி மஹிந்த வித்தியாலயத்திலும், 1945 ஆம் ஆண்டு சிங்களம் மற்றும் ஆங்கில மொழித்துறையில் பட்டம் பெற்றுள்ளார்.
1949 மார்ச் மாதம் 8ஆம் திகதி ஊடகவியலாளராக லேக்ஹவுஸ் நிறுவனத்தில் இணைந்துக் கொண்டார். தினமின, டெய்லி நிவூஸ், சன்டே ஒப்சவர், சிலுமின மற்றும் மக்கள் பத்திரிகைகளில் ஆசிரியராக சேவையாற்றியுள்ளார். அத்துடன் லேக்ஹவுசின் நிறுவனத்தில் ஆலோசனை பிரிவின் உறுப்பினராகவும் கடமையாற்றியுள்ளார்.
1978 தொடக்கம் 1982ஆம் ஆண்டுகளில் நவயுகய பத்திரிகையின் பிரதான ஆசிரியராக கடமையாற்றியுள்ளார். இவர் ஊடகத்துறையில் பெரும் சேவையாற்றியுள்ளார். பிற்பட்ட காலத்தில் பல ஊடகங்கள் தோற்றம் பெறுவதற்கும் முன்னோடியாக செயற்பட்டுள்ளார். 1960ம் ஆண்டு பொதுசன தொடர்பாடல் தொடர்பிலான பாடநெறியை கற்பித்த முதல் கலாநிதியாக இவரை கருத முடியும்.
களனி பல்கலைக்கழகம், கொழும்பு மற்றும் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைகழகம் ,திறந்த பல்கலைக்கழகம் ஆகியவற்றில் ஊடகத்துறை தொடர்பான பாடநெறியை ஆரம்பிப்பதற்கு முன்னோடியாக செயற்பட்டார். ஊடகத்துறையில் பல ஊடகவியலாளர்களை இவர் உருவாக்கியுள்ளார். ஊடகத்துறை மாத்திரமல்ல பல்துறைகளிலும் நிபுணத்துவம் பெற்றவர்.
70 வருடகாலமாக ஊடகத்துறையில் சேவையாற்றியுள்ளார். பத்திரிகைத் துறையில் தனது ஊடக பணியை ஆரம்பித்த இவர் தொலைக்காட்சி, வானொலி மற்றும் சமூக வலைத்தளம் ஊடாகவும் தனது பணியை முன்னெடுத்துள்ளார். நடமாடும் நூலகமாக தனது அறிவாற்றலை நாட்டு மக்களுக்கு வழங்கினார். இவரது இழப்பு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும். இவரது ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறோம்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM