(செ.தேன்மொழி)
சிறைச்சாலைகளில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகுபவர்களின் தொகை குறைந்து வருகிறது. இன்று காலை 6 மணி வரை 8 தொற்றாளர்கள் மாத்திரமே அடையாளம் காணப்பட்டதாக சிறைச்சாலைகள் ஊடகப்பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்தார்.
இதுதொடர்பில் அவர் மேலும் கூறியதாவது ,
சிறைச்சாலைகளில் கொரோனா தொற்றுக்குள்ளாகுபவர்களின் எண்ணிக்கை குறைவடைந்து வருகிறது. இன்று காலை 6 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலத்திற்குள் 8 பேருக்கு மாத்திரமே தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டிருந்த விளக்கமறியல் கைதிகளாவர்.
வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்ட 5 அதிகாரிகள் உட்பட 139 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஏற்கனவே தொற்றுக்குள்ளானவர்களில் 129 சிறைச்சாலை அதிகாரிகள் உட்பட 4228 பேர் குணமடைந்துள்ளனர். 8 பேர் மாத்திரமே கொரோனா தொற்றின் காரணமாக உயிரிழந்துள்ளனர்.
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக சிறைச்சாலைகளில் 4377 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
134 சிறைச்சாலை அதிகாரிகள், 487 ஆண் கைதிகள் , 11 பெண் கைதிகள் , 3511 ஆண் விளக்கமறியல் கைதிகள் , 234 பெண் விளக்கமறியல் கைதிகளுமே இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
வெலிக்கடைச் சிறைச்சாலையில் 886 பேரும் , மெகசின் சிறைச்சாலையில் 868 பேரும் , மஹர சிறைச்சாலையில் 814 பேரும் , கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலையில் 434 பேரும் மற்றும் நீர்கொழும்பு சிறைச்சாலையில் 363 பேருமே இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM