ஆரம்பத்திலிருந்து தெரிவித்தேன் கேட்டீர்களா ? 69 இலட்சம் மக்கள் ஏமாற்றமடைந்துள்ளார்கள் - புலம்புகிறார் வெல்கம

23 Jan, 2021 | 01:53 PM
image

(இராஜதுரை ஹஷான்)

நாட்டில் உள்ள தேசிய வளங்கள் ராஜபக்ஷக்களின் குடும்ப சொத்தல்ல. தான்தோன்றித்தனமாக பிற நாட்டவர்களுக்கு கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை இந்தியாக்கு வழங்க அரசாங்கம் முன்னெடுக்கும் செயற்பாட்டுக்கு நாட்டு மக்கள் அனைவரும் அரசியல் கட்சி பேதங்களை துறந்து எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்தார்.

69 இலட்சம் மக்கள் ஏமாற்றமடைந்துள்ளார்கள்.

இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கம் ஆட்சிக்கு வந்தால் இராணுவ ஆட்சியிலான நிர்வாகம் செயற்படுத்தப்படும் என ஆரம்பத்தில் இருந்து குறிப்பிட்டேன்.

அரச நிர்வாகம் தொடர்பில் புலமையற்ற ஒருவரை ஜனாதிபதியாக்கி இன்று அரச சிவில் சேவைகள் அனைத்தும் இராணுவமயப்படுத்தப்பட்டுள்ளன. 69 இலட்சம் மக்கள் ஏமாற்றமடைந்துள்ளார்கள்.

அரச சேவையிலும், உயர் அரச பதவிகளிலும் இராணுவத்தினர் நியமிக்கப்பட்டுள்ளார்கள். சிவில் சேவைகள் குறித்து புலமைப்பெற்றவர்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளார்கள்.

இராணுவ ஆட்சியினை கொண்டுள்ள நாடுகளிலும் ஆரம்பத்தில் இவ்வாறான தன்மையே காணப்பட்டது என்பதை நாட்டு மக்கள் தற்போதாவது புரிந்துக் கொள்ள வேண்டும்.

நாட்டில் உள்ள தேசிய வளங்கள் ராஜபக்ஷக்களின் குடும்ப சொத்து அல்ல. கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை இந்திய நிறுவனத்திற்கு வழங்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்ட்டுள்ளன.

இந்தியாவின் அதானி நிறுவனத்தை அந்நாட்டு மக்கள் எதிர்க்கின்ற நிலையில் அரசாங்கம் அந்த நிறுவனத்துக்கு கிழக்கு முனையத்தை வழங்க தீர்மானித்துள்ளமை நகைப்புக்குரியது.

நல்லாட்சி அரசாங்கம் அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீன நிறுவனத்துக்கு கொடுக்கும் போது முன்னின்று போராட்டங்களில் ஈடுப்பட்டவர்கள் இன்று  இந்தியாவுக்கு அடிபணிந்து கிழக்கு முனையத்தை தாரைவார்க்க முயற்சிக்கிறார்கள்.

49 சதவீத உரிமம் இந்தியாவுக்கு வழங்கப்படும் என்று குறிப்பிடுவதை புத்திசாலியான மக்கள் எற்றுக்கொள்ளமாட்டார்கள்.

தேசிய வளங்கள் ஒரு குடும்பத்தின் சொத்தல்ல. தான்தோன்றித்தனமாக செயற்பட கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை இந்தியாவுக்கு வழங்கும் தீர்மானத்தை நாட்டு மக்கள் அனைவரும் ஒன்றினைந்து அரசியல் கட்சி பேதங்களை துறந்து எதிர்க்க வேண்டும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47