(எம்.ஆர்.எம்.வசீம்)
சாரதி அனுமதி பத்திரங்களை புதுப்பிக்கும் காலத்தை மேலும் 3 மாதங்களுக்கு நீடிப்பதற்கு மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தீர்மானித்திருக்கின்றது.
அதன் பிரகாரம் எதிர்வரும் மார்ச் மாதம் 31ஆம் திகதிவரை நீடிக்கப்பட்டிருப்பதாக மோட்டார் போக்குவரத்து திணைக்களம் அறிவித்துள்ளது.
நாட்டில் ஏற்பட்டிருக்கும் கொரோனா தொற்று காரணமாக வாகன சாரதி அனுமதிப்பத்திரம் புதுப்பிப்பதற்காக திணைக்களத்துக்கு வருகைதருவது குறிப்பிட்ட தொகையினருக்கு வரையறுக்கப்பட்டுள்ளது.
அதனால் வாகன சாரதி அனுமதிப்பத்திரம் புதுப்பிக்கும் நடவடிக்கையும் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலே இடம்பெறுகின்றது.
அதனால் வாகன சாரதி அனுமதிப்பத்திம் காலாவதியான சாரதிகள், வாகனங்களை செலுத்தும் போது எதிர்கொள்ளக்கூடிய அசெளகரியங்களில் இருந்து விடுவிப்பதற்காக (மோட்டார் வாகன சட்டத்தின் 203ஆவது சரத்து) இவ்வாறு காலத்தை நீடிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கின்றது.
இதற்கு முன்னர் வாகன சாரதி அனுமதிப்பத்திரங்களை புதுப்பித்துக்கொள்ளும் காலம் 2020 டிசம்பர் 31வரை நீடிக்கப்பட்டிருந்தது. தற்போது அதனை மேலும் 3 மாதங்களுக்கு நீடித்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM