பள்ளிவாசல் மீது தாக்குதல் தொடர்பில் அஸாத் சாலி

Published By: Robert

07 Aug, 2016 | 03:44 PM
image

பொரளஸ்கமுவ ஜும்ஆ பள்ளிவாசல் மீது இன்று அதிகாலை 1.15 மணியளவில் இனம் தெரியாதவர்களினால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இரண்டு முச்சக்கரவண்டிகளில் வந்தவர்களால் இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. இதன் காரணமாக பள்ளிவாசலுக்கு பாரிய சேதம் ஏற்பட்டுள்ளது. அத்துடன் பள்ளிவாசலில் கடமையில் இருக்கும் முஅத்தின் மீதும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

பள்ளிவாசல் மீது தாக்குதல் இடம்பெற்ற செய்தியை கேள்வியுற்று அங்கு சென்றிருந்த முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினரும் தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவருமான அஸாத் சாலி தெரிவிக்கையில்,

பள்ளிவாசல் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட செய்தி கேள்வியுற்றதுடன் அங்கு சென்று நிலைமையை அவதானித்தேன். பள்ளிவாசலுக்கு நுழைவதற்கு 2 நுழைவாயில்கள் இருக்கின்றன. இரண்டையும் உடைத்துக்கொண்டு இந்த கும்பல் பள்ளியினுள் நுழைந்து பள்ளிவாசலில் இருந்த பொருட்கள் மீது சேதம் ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக பள்ளியினுள் இருந்த மின் விசிறி, கடிகாரம், குர்ஆன்கள் மற்றும் ஜன்னல்களுக்கு சேதம் ஏற்படுத்தியுள்ளனது.

அத்துடன் பள்ளிவாசலுக்குள் தூங்கிக்கொண்டிருந்த முஅத்தின் மீதும் இவர்கள் தாக்கியுள்ளனர். காயமடைந்த அவர் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைக்கு பின்னர் வைத்தியசாலையில் இருந்து இன்று நண்பகல் வெளியேறியுள்ளார். இரு முச்சக்கர வண்டிகளில் வந்துள்ள இந்த கும்பளில் இரண்டு பேர் மாத்திரம் பள்ளிவாசலுக்கு நுழைந்து இவ்வாறு தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். 

சம்பவம் தொடர்பில் பொரளஸ்கமுவ பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளோம். அத்துடன் பொலிஸ்மா அதிபருடன் தொடர்புகொண்டு சம்பவம் தொடர்பில் விளக்கம் அளித்தேன். பொலிஸ்மா அதிபர் பள்ளிவாசல் நிர்வாகசபை உறுப்பினர்களுடன் இன்று மாலை சம்பவம் தொடர்பில் கலந்துரையாடியுள்ளார். அத்துடன் பள்ளிவாசலுக்கு அருகில் இருக்கும் 2 நிறுவனங்களில் பொருத்தப்பட்டுள்ள பாதுகாப்பு கமராக்களை பரிசோதிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. நாளைய தினம் குறிப்பிட்ட பாதுகாப்பு கமராக்கள் பரிசோதிக்கப்படவுள்ளன. அதன்பின்னர் குற்றவாளிகளை இனம் கண்டுகொள்ளலாம் என நம்புகின்றோம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04