உயர் நீதிமன்ற கட்டிட தொகுதியில் நால்வருக்கு கொரோனா தொற்று

Published By: Digital Desk 4

20 Jan, 2021 | 10:57 PM
image

(எம்.எப்.எம்.பஸீர்)

கொழும்பு, வாழைத்தோட்டம் பொலிஸ் பிரிவில் புதுக்கடை பகுதியில் அமைந்துள்ள உயர் நீதிமன்ற கட்டிடத் தொகுதியில் முன்னெடுக்கப்பட்ட எழுந்தமானமாக மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனைகளில் 4 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

100 பேருக்கு முன்னெடுக்கப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனைகளில் இந்த நான்கு தொற்றாளர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக உயர் நீதிமன்றின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் கூறினார்.

உயர் நீதிமன்ற கட்டிடத் தொகுதியில் பணியாற்றும் தனியார் பாதுகாப்பு ஊழியரான பெண்ணொருவர், சட்டத்தரணி ஒருவரின் உதவியாளர், துப்புரவு பிரிவின் பெண் ஒருவர், பதிவு செய்தல் பிரிவில் சேவையாற்றும் பெண் ஒருவருக்குமே இவ்வாறு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

 இந் நிலையில் உயர் நீதிமன்ற கட்டிடத் தொகுதியில் மேலும் 250 பேருக்கு பி.சி.ஆர். பரிசோதனைகளை முன்னெடுக்க இன்று மாலையாகும் போது தீர்மானிக்கப்ப்ட்டிருந்தது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38
news-image

மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 35...

2024-04-19 14:11:24
news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47
news-image

போதைப்பொருள் கடத்தல் காரர்களுக்கும் பொலிஸாருக்கும் தொடர்பு...

2024-04-19 14:36:47
news-image

நாட்டில் வைத்தியர்களுக்குப் பற்றாக்குறை!

2024-04-19 13:04:56
news-image

வரலாறு : கச்சதீவு யாருக்கு சொந்தம்...

2024-04-19 13:12:49
news-image

கொழும்பில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்கள் தொடர்பில்...

2024-04-19 12:39:54
news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-19 12:26:04
news-image

கலால் திணைக்களத்தின் அதிகாரி பணி இடைநிறுத்தம்!

2024-04-19 12:49:10