(செ.தேன்மொழி)
மன்னார், ஹோமாகம மற்றும் கல்கிஸ்ஸ ஆகிய பகுதிகளில் கஞ்சா மற்றும் போதை வில்லைகளுடன் இளைஞர்கள் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித்ரோஹண தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,
மன்னார்
மன்னார் - பேசாலை பகுதியில் கஞ்சாப் போதைப் பொருளை கடத்திச் சென்ற 26 வயதுடைய இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட வேனிலிருந்து 20 கிலோ கிராம் கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.
ஹோமாகம
ஹோமாகம - பிட்டிபன பகுதியில் குற்றப்புலனாய்வு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது , ஒரு கிலோ 650 கிராம் கஞ்சாவுடன் 26 வயதுடைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கல்கிஸ்ஸ
கல்கிஸ்ஸ பகுதியில் குற்றப்புலனாய்வு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது போதைவில்லைகளுடன் மேலும் இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடமிருந்து 1000 செயற்கை போதை வில்லைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM