தனிமைப்படுத்தல் விதிகளை பின்பற்றாதோர் குறித்து பிரதி பொலிஸ்மா அதிபர் வெளியிட்டுள்ள முக்கிய விடயம்..!

Published By: J.G.Stephan

20 Jan, 2021 | 01:48 PM
image

(செ.தேன்மொழி)

நாடளாவிய ரீதியில் முகக்கவசம் அணியாமை, சமூக இடைவெளியை பேணாமை தொடர்பில் 2,662 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் 2,500 பேருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித்ரோஹண தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது, கொவிட் - 19 வைரஸ் பரவல் காரணமாக காத்தான்குடி பொலிஸ் பிரிவு மற்றும் நாடளாவிய ரீதியில் பல கிராம சேவகர் பிரிவுகள், வீதிகள், குடியிருப்பு தொகுதிகள், தோட்டங்கள் ஆகியவை மாத்திரமே தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.  அந்த பகுதிகளைச் சேர்ந்தவர்களை தொடர்ந்தும் தனிமைப்படுத்தல் சட்டவிதிகளையும், சுகாதார ஒழுக்கவிதிகளையும் கடைப்பிடிக்குமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

தனிமைப்படுத்தல் சட்டவிதிகளுக்கு புறம்பாக செயற்படும் நபர்களை கைது செய்வதற்காக தொடர்ந்தும் கண்காணிப்பு நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன. மேல்மாகாணத்தை போன்று நாட்டின் ஏனையப் பகுதிகளிலும் இத்தகைய சுற்றிவளைப்புகள் இடம்பெற்றுவருகின்றன. 

முகக்கவசம் அணியாமை மற்றும் சமூக இடைவெளியை பேணாமை தொடர்பில் இன்று புதன்கிழமை காலை ஆறு மணியுடன் முடிவடைந்த 24 மணித்தியாலத்திற்குள் 31 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் 30 ஆம் திகதி முதல் இதுவரையில் 2,662 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றார். 

அத்தோடு, மேல்மாகாணத்தில் தனிமைப்படுத்தல்  சட்டவிதிகளுக்கு புறம்பாக செயற்பட்டதாக அடையாளம் காணப்பட்டுள்ள 1,050 நிறுவனங்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மேல்மாகாணத்திலிருந்து தூர பிரதேசங்களுக்கு செல்லும் பயணிகள் மற்றும் மேல்மாகாணத்தில் முகக்கவசம் அணியாமல் இருப்பவர்களை இலக்கு வைத்தும் அன்டிஜன் பரிசோதனைகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றன.  இந்த செயற்பாடுகளுக்கு அனைவரையும் ஒத்துழைப்பு வழங்குமாறும் கேட்டுக் கொள்கின்றோம்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

விருந்துபசாரத்தில் வாக்குவாதம்: ஒருவர் தாக்கப்பட்டு உயிரிழப்பு!

2024-04-19 10:20:31
news-image

சில பகுதிகளில் 12 மணித்தியாலங்கள் நீர்...

2024-04-19 10:18:39
news-image

1991 ஆம் ஆண்டு ருமேனியாவில் இடம்பெற்ற...

2024-04-19 09:59:40
news-image

காசல்ரீ நீர்த்தேக்கத்தில் நீராடச் சென்ற மாணவன்...

2024-04-19 09:36:08
news-image

போதைபொருள் கடத்தல்களை இல்லாதொழிக்க சிறப்பு மோட்டார்...

2024-04-19 10:11:07
news-image

வெற்றிலை,பாக்கு விலை உயர்வு

2024-04-19 10:16:54
news-image

சிறுவர் இல்லங்களில் சிறுவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி!

2024-04-19 09:00:44
news-image

போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் நெருங்கிய தொடர்புகளை பேணிய...

2024-04-19 09:03:35
news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14