(எம்.மனோசித்ரா)
அயலகத்திற்கு முதலிடம் என்ற கொள்கையில் இந்தியா உரிய முக்கியத்துவத்தை வழங்கி கொவிட்-19 க்கு எதிரான இலங்கையின் போராட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்குவதாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவிற்கு உறுதியளித்துள்ளார்.
தேசிய அளவில் கொவிட்-19 வைரஸ் தடுப்பு மருந்தினை மக்களுக்கும் வழங்கும் திட்டத்தை வெற்றிகரமாக முன்னெடுத்தமைக்கு வாழ்த்தி ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தனது உத்தியோகப்பூர்வ டுவிட்டர் தளத்தில் பதிவேற்றிருந்தார். இதற்கு பதிலளிக்கும் போதே இந்திய பிரதமர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி கோத்தாபய மேலும் குறிப்பிட்டுள்ளதவது , கொவிட்-19 தடுப்பூசி திட்டத்தை வெற்றிகரமாக முன்னெடுத்தமை மற்றும் நட்பு நாடுகளுக்கு பிரதமர் மோடி அளித்த தாராள மனப்பான்மைக்கும் நன்றி கூறுவதுடன் வாழ்த்துக்களையும் தெரிவிப்பதாக தெரிவித்திருந்தார்.
இதற்கு பதிலளித்துள்ள இந்திய பிரதமர் மோடி , தொற்று நோயை கூட்டாக எதிர்த்து போராடும் போது அயலகத்திற்கு முதலிடம் என்ற கொள்கைக்கு முக்கியத்துவம் கொடுப்போம் என குறிப்பிட்டுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM