பதவிலிருந்து வெளியேறும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஜனவரி 26 முதல் இங்கிலாந்து உள்ளிட்ட ஐரோப்பா நாடுகளின் பயணத் தடையை நீக்குவதற்கான அறிவிப்பை திங்கள்கிழமை வெளியிட்டார்.
கொவிட்-19 தொற்றுநோய் காரணமாக கடந்த மார்ச் மாதம் விதிக்கப்பட்ட பயணக் கட்டுப்பாடுகளை இந்த உத்தரவு நீக்குவதுடன், பிரேசிலிலிருந்து அமெரிக்காவுக்கு பயணிகளை பயணிக்கவும் அனுமதிக்கிறது.
கொரோனா வைரஸ் பணிக்குழு உறுப்பினர்கள் மற்றும் பொது சுகாதார அதிகாரிகளின் ஆதரவைப் பெற்ற பின்னர், தொற்றுநோய்க்கு பதிலளிக்கும் விதமாக கடந்த ஆண்டு தொடக்கத்தில் அவர் விதித்த கட்டுப்பாடுகளை நீக்கும் உத்தரவில் டிரம்ப் திங்களன்று கையெழுத்திட்டார்.
ட்ரம்பின் இந்த உத்தரவு பகிரங்கப்படுத்தப்பட்ட உடனேயே, அமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதியாக பதவியேக்கவுள்ள ஜோ பைடனின் செய்தித் தொடர்பாளர் ஜென் சாகி,
எங்கள் மருத்துவக் குழுவின் ஆலோசனையின் பேரில், நிர்வாகம் இந்த கட்டுப்பாடுகளை ஜனவரி 26 ஆம் திகதி நீக்க விரும்பவில்லை என்று டுவிட் செய்துள்ளார்.
அத்துடன் தொற்றுநோய் மோசமடைந்து வருவதோடு, மேலும் தொற்று வகைகளும் உலகெங்கிலும் உருவாகி வருவதால், இது சர்வதேச பயணங்களுக்கான கட்டுப்பாடுகளை நீக்குவதற்கான நேரம் அல்ல என்று அவர் மேலும் கூறினார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM