நாட்டில் கொவிட் தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை நாளாந்தம் அதிகரித்துச் செல்கின்ற அதே வேளை மரணங்களின் எண்ணிக்கையும் தொடர்ச்சியாக அதிகரிக்கிறது.
சுகாதார அமைச்சில் 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையில், அவர்களுடன் தொடர்புகளை பேணி 77 பேர் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இன்று இரவு 8.30 மணி வரையான காலப்பகுதியில் 332 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டிருந்தனர். அவர்கள் அனைவரும் பேலியகொடை கொரோனா கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் இலங்கையில் இதுவரை 53,409 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இனங்காணப்பட்ட மொத்த தொற்றாளர்களில் 45 820 பேர் குணமடைந்துள்ளதோடு 7324 தொற்றாளர்கள் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர். 717 பேர் தொற்று அறிகுறிகளுடன் சந்தேகத்தினடிப்படையில் மருத்துவ கண்காணிப்பில் உள்ளதாக சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது.
இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்தவிற்கு கொரோனா தொற்று இன்று உறுதிப்படுத்தப்பட்டது.
இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்தவுடன் நெருங்கி பழகியதை அடுத்து கல்வி அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் சுய தனிமையில் இருக்க தீர்மானித்துள்ளார்.
கல்வி அமைச்சர் தனது குடும்பத்தாருடன் சுய தனிமையில் உள்ளதாக கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.
17 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாத்திரம் 8 மரணங்கள் பதிவாகின. அதற்கமைய நாட்டில் மொத்த கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 264 ஆக உயர்வடைந்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM