மகளை தாக்கிய குற்ற உணர்வை தாங்க முடியாத தந்தை தூக்கிட்டு தற்கொலை..!

Published By: J.G.Stephan

18 Jan, 2021 | 05:32 PM
image

மகளை தாக்கிய குற்ற உணர்வு தாங்காது, தந்தையொருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். 

கணவன், மனைவிக்கிடையே ஏற்பட்ட சண்டையின் போது குறுக்கே சென்ற மகள் மீது தந்தையொருவர் தாக்கியதையடுத்து, படுகாயமடைந்த மகள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், தந்தை வீட்டின் கூரையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை (17.01.2021)  மதியம் இடம்பெற்றுள்ளதாக திருக்கோவில் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

திருக்கோவில் 2 ம் பிரிவு நல்லையா வீதியைச் சேர்ந்த 41 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையான இராசமாணிக்கம் சுகுமார் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். 

குறித்த நபருக்கும், அவரது மனைவிக்கும் இடையே சம்பவதினமான நேற்று பகல் சண்டை ஏற்பட்டுள்ளது. இதன்போது தாயாரை தந்தை தாக்க முற்பட்டபோது மகள் குறுக்கே சென்ற நிலையில் அவர் மீது தாக்குதல் நடத்தியுள்ளார். இதனால் அவர் காயமடைந்த நிலையில் திருக்கோவில் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதனையடுத்து, மனைவி வைத்தியசாலைக்கு சென்ற நிலையில், வீட்டில் யாரும் இல்லாத போது மகளை தாக்கிய குற்ற உணர்வினை தாங்க முடியாமல்  வீட்டின் அறையின் கூரையில்  தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார் என பொலிசாரின் ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்நிலையில், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை திருக்கோவில் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-18 12:44:55
news-image

உக்ரைன் போருக்கு இலங்கையர்களை அனுப்பிய ஓய்வு...

2024-04-18 12:23:02
news-image

தேர்தல்களை பிற்போடுவதை கடுமையாக எதிர்ப்போம் -...

2024-04-18 11:52:31
news-image

கடலில் குழந்தை பிரசவித்த நயினாதீவு பெண்

2024-04-18 11:40:05
news-image

மைத்திரிபால சிறிசேனவிற்கு தடை உத்தரவு நீடிப்பு!

2024-04-18 12:12:09
news-image

14 வாரங்களில் 7 இலட்சம் சுற்றுலாப்...

2024-04-18 11:56:42
news-image

யாழ்.கட்டைக்காட்டில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட படகு...

2024-04-18 12:40:37
news-image

மதுபோதையிலிருந்த நபரால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-04-18 11:11:00
news-image

இரு பெண்களின் சடலங்கள் வீட்டிலிருந்து மீட்பு...

2024-04-18 09:45:24
news-image

யாழ்ப்பாணத்தில் கசிப்பினை பொதி செய்துகொண்டிருந்த பெண்...

2024-04-18 08:47:07
news-image

இன்றைய வானிலை

2024-04-18 06:04:36
news-image

ஹிருணிகாவுக்கு அழைப்பாணை

2024-04-18 02:38:02