(எம்.எப்.எம்.பஸீர்)
5 தொலைபேசிகள் மீட்பு; 7 நாட்கள் தடுப்புக் காவலில் வைத்து விசாரிக்க திட்டம் -
போதைப் பொருள் கடத்தல், வர்த்தக நடவடிக்கைகளுக்கு உதவி ஒத்தாசை வழங்கியதாக கூறி, அனுராதபுரம் மாவட்ட குற்றத் தடுப்புப் பிரிவின் பொலிஸ் பரிசோதகர் ஒருவர் அனுராதபுரம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இன்று முற்பகல் 11.15 மணியளவில் அவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த விவகாரம் தொடர்பில் , அனுராதபுரம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் கீழ் சிறப்பு விசாரணைகள் இடம்பெற்று வரும் நிலையில், சந்தேக நபரான பொலிஸ் பரிசோதகரிடம் இருந்து 5 தொலைபேசிகள் மீட்கப்பட்டதாகவும், அது தொடர்பிலான பகுப்பாய்வு நடவடிக்கைகளின் போது வெளிப்பட்ட தகவல்களுக்கமைய பொலிஸ் பரிசோதகரைக் கைது செய்ததாகவும் பொலிஸ் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன கூறினார்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட பொலிஸ் பரிசோதகர் 43 வயதுடையவர் என தெரிவித்த பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹன, சந்தேக நபரை 7 நாட்கள் அனுராதபுரம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரின் பொறுப்பில் தடுத்து வைத்து விசாரிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும், அதற்கான நீதிமன்ற அனுமதியைப் பெறவுள்ளதாகவும் கூறினார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM