மராத்திய இயக்குனர் கிஷோர் பாண்டுரங் பலேகர் இயக்கத்தில் தயாராகும் ''காந்தி டாக்ஸ்'' என்ற திரைப்படத்தில் ''மக்கள் செல்வன்'' விஜய் சேதுபதி கதையின் நாயகனாக பேசாமல் நடிக்கிறார்.
1987 ஆம் ஆண்டில் உலகநாயகன் கமலஹாசன் நடிப்பில் வெளியான திரைப்படம் ''பேசும் படம்''. திரைப்படத்தில் கமல்ஹாசன் பேசாமல் மௌனமாக நடித்திருப்பார். 33 ஆண்டுகளுக்குப் பிறகு ''காந்தி டாக்ஸ்'' என்ற பெயரில் மீண்டும் ஒரு மௌன படம் தயாராகிறது.
இதனை மராத்திய இயக்குனர் கிஷோர் பாண்டுரங் பலேகர் இயக்குகிறார். இந்தப் படத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி கதையின் நாயகனாக சவாலான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
இதுதொடர்பாக இயக்குனர் பேசுகையில்,
'19 ஆண்டுகளாக இந்த சவாலான கதையை தயார் செய்தேன். எம்முடைய கனவுப் படைப்பான ''காந்தி டாக்ஸ்'' மூலம் நனவாக போகிறது. இந்த திரைப்படத்தில் கதையின் நாயகனாக நடிக்க பொலிவுட்டிலும், ஏனைய திரை உலகிலும் தேடிக்கொண்டிருந்தேன்.
இப்படத்தின் திரைக்கதை, உணர்வு ரீதியாக எம்முடைய இதயத்திற்கு நெருக்கமானது. இதனை எம்முடைய கோணத்தில் உட்கிரகித்து படைப்பை வெளிப்படுத்தும் நடிகரை தேடிக் கொண்டிருந்த பொழுது விஜய் சேதுபதியை பற்றி அறிந்து, அவரை தொடர்பு கொண்டேன். அவர் எம்முடைய திரைக்கதையை முழுமையாக படித்த பிறகு, படைப்பு குறித்த என்னுடைய அணுகுமுறையை முழுவதுமாக புரிந்து கொண்டார்.
ஒவ்வொரு இயக்குநரும் தங்களுடைய நடிகர்களிடமிருந்து குறிப்பிட்ட ஒரு விடயத்தை எதிர்பார்க்கின்றனர். அது விஜய் சேதுபதியிடம் பொருத்தமாக இருந்தது. அவரது நடிப்புத் திறன், ஸ்டைல், குரலில் இருக்கும் ஆற்றல் என பல விடயங்கள் எம்மை வியக்க வைத்தது. அவரை நேரில் சந்தித்தவுடன் என் கதையின் நாயகன் கிடைத்து விட்டான் என்பதை உணர்ந்தேன். விரைவில் அவருடன் இணைந்து பணியாற்றும் தருணங்களுக்காக ஆர்வமுடன் காத்துக்கொண்டிருக்கிறேன்.' என்றார்.
இதனிடையே மக்கள் செல்வன் விஜய் சேதுபதி பொலிவுட்டின் முன்னணி இயக்குனர் ஸ்ரீராம் ராகவன் இயக்கவிருக்கும் பெயரிடப்படாத படத்திலும், இயக்குனர் சந்தோஷ் சிவன் இயக்கும் 'மும்பைகார்' என்ற படத்திலும், பொலிவுட்டின் முன்னணி நட்சத்திரமான ஷாகித் கபூருடன் இது வலைத்தளத் தொடரிலும் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார் என்பதும், இவர் இந்தியில் நடிக்கும் நான்காவது திரைப்படம் ''காந்தி டாக்ஸ்'' என்பதும் குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM