பயங்கரவாதத் தாக்குதலில் கொங்கோவில் 46 பேர் பலி

17 Jan, 2021 | 03:34 PM
image

கொங்கோ நாட்டில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 46 பொது மக்கள் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆபிரிக்க நாடான  கொங்கோ குடியரசில் பல ஆண்டுகளாக உள்நாட்டுப் போர் நடந்து வருகிறது.

அங்குள்ள கிளர்ச்சியாளர்களுக்கும் அந்நாட்டு அரசுக்கும் அவ்வப்போது ஏற்படும் மோதலில் அப்பாவி பொது மக்கள் உயிரிழக்கும் சம்பவங்கள் தொடர்ந்து வருகின்றன.

ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்டுள்ள தகவலின்படி கடந்த 2019 ஆம் ஆண்டு நடந்த பயங்கரவாத தாக்குதல்களில் சுமார் 1000 பொது மக்கள் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கொங்கோவில் உள்ள இருமூ மாகாணத்தில் அபிமீ என்ற கிராமத்தில் பயங்கரவாதிகள் சிலர்  தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலை ஏ.டி.எப். என்ற பயங்கரவாத அமைப்பு நடத்தியதாகவும், இதில் 46 பேர் உயிரிழந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் பலர் படுகாயமடைந்துள்ளதாகவும், அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33
news-image

ஜேர்மனியில் பேர்லின் - சூரிச் பஸ்...

2024-03-27 18:06:25
news-image

ஒரு பாலினத் திருமண சட்டமூலம் தாய்லாந்து...

2024-03-27 13:27:50
news-image

கடலுக்குள் விழுந்த உதவிப்பொருட்களை மீட்க முயன்ற...

2024-03-27 12:18:17