வவுனியாவில் முடக்கப்பட்ட சில பகுதிகள் நாளை முதல் வழமை நிலைக்கு திரும்புவதுடன் மாவட்டத்திலுள்ள அனைத்து பாடசாலைகளும் திறக்கப்படவுள்ளதாக வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் எஸ்.எம்.சமன் பந்துலசேன தெரிவித்துள்ளார்.
வவுனியாவின் முடக்க நிலமை தொடர்பில் அவரிடம் ஊடகவியலாளர்கள் வினாவிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்து ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவித்த அவர்,
வவுனியா மாவட்டத்தில் அதிகரித்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையினையடுத்து கடந்த 12.01.2021 அன்று மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் கொவிட்19 அவசர கால நிலமைகள் தொடர்பில் விசேட கலந்துரையாடல் இடம்பெற்று மாவட்டத்தின் சில பகுதிகளை 24 ஆம் திகதி வரை தனிமைப்படுத்துவதாக தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.
அதன்படி வவுனியா நகருக்குள் பிரவேசிக்கும் பிரவேசிக்கும் பகுதிகளான நெளுக்குளம் சந்தி , தாண்டிக்குளம் சந்தி ,மாமடுவ சந்தி ,பூந்தோட்டம் சந்தி , கண்டி வீதி இரானுவ முகாம் சந்தி ஆகிய இடங்களில் உள்ளடக்கிய பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டிருந்தன.
இந் நிலையில் வவுனியா பஜார் வீதி , தர்மலிங்கம் வீதி , சந்தை சுற்றுவட்ட வீதி போன்றவற்றினை தவிர்ந்த ஏனைய தனிமைப்படுத்தப்பட்ட இடங்கள் நாளை திங்கட்கிழமை வழமைக்கு திரும்புவதுடன் வவுனியா மாவட்டத்திலுள்ள அனைத்து பாடசாலைகளும் ஆரம்பிக்கப்படவுள்ளதுது.
ஆகவே பொதுமக்கள் அனைவரும் சுகாதார நடைமுறைகளை இறுக்கமாக பின்பற்றி நடந்து கொள்ளுமாறும் அவர் வலியுறுத்திக் கேட்டுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM