கொழும்பில் நீண்ட நாட்களாக தனிமைப்படுத்தப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ள பகுதிகளைச் சேர்ந்த மக்கள் தொடர்ந்தும் சுகாதார விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டியது கட்டாயமாகுமென பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
அதேபோன்று நாட்டின் ஏனைய பகுதிகளைச் சேர்ந்தவர்களும் முகக்கவசம் அணிவதுடன் , உரிய சுகாதார விதிமுறைகளையும் முறையாக கடைப்பிடிக்க வேண்டும்.
அதற்கமைய , முகக்கவசம் அணியாதவர்கள் தொடர்பில் தொடர்ந்தும் கண்காணிப்பு நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன.
இதன்போது , மேல்மாகாணத்தை விடுத்து , நாட்டின் ஏனைய பகுதிகளில் முக்கவசம் அணியாதவர்களை அடையாளம் காணுவதற்காக மேற்கொள்ளப்பட்டுவரும் கண்காணிப்பு நடவடிக்கைகளின் போது , இன்று சனிக்கிழமை காலை ஆறு மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலத்திற்குள் 35 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் , கடந்த வருடம் அக்டோபர் மாதம் 30 ஆம் திகதி முதல் இதுவரையில் 2549 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் , அவர்களில் 2400 பேருக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM