(செ.தேன்மொழி)
கொஸ்கொட பகுதியில் சொகுசு பஸ்ஸில் 18 கோடி ரூபாய் பெறுமதியான ஐஸ் போதைப் பொருளை கடத்திய சந்தேகநபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் ஏழு நாட்கள் தடுப்பு காவலில் வைத்து விசாரணைக்குட்படுத்தப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித்ரோஹண தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில் ,
கொழும்பு குற்றப் புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய கொஸ்கொட பகுதியில் சொகுசு பஸ் ஒன்று சுற்றிவளைக்கப்பட்டது. அந்த பஸ்ஸிலிருந்து 18 கிலோ கிராம் தொகை ஐஸ் போதைப் பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. இதன்போது பஸ்ஸின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
27 வயதுடைய சாரதி பல்வேறு பகுதிகளுக்கு இவ்வாறு போதைப் பொருட்களை கடத்திச் சென்றுள்ளமை விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது. தென்மாகாணத்தில் ஒரு பிரதேசத்திற்கு இந்த போதைப் பொருள் கொண்டு செல்லப்பட்டுள்ளது.
இந்தியாவில் உயிரிழந்தாக கூறப்படும் 'அங்கொட லொக்கா' என்ற பிரபல போதைப்பொருள் கடத்தல் காரரின் சகாவான 'லெட்டி' என்ற போதைப் பொருள் கடத்தல்காரருக்கு சொந்தமான போதைப் பொருளே இவ்வாறு கடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொழும்பு குற்றப்புலனாய்வு பிரிவினர் சந்தேக நபரை 7 நாட்கள் தடுப்பு காவலில் வைத்து விசாரணைக்குட்படுத்துவர் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM