வலுவான இந்தியா தான் சீனாவுக்கு எதிராக சமநிலையில் செயல்படும் என்று வெள்ளை மாளிகை ஆவணம் ஒன்று கூறுகிறது.
அமெரிக்காவில் ட்ரம்ப் நிர்வாகம் வெளியேற உள்ள நிலையில் ஜோ பைடனின் புதிய நிர்வாகம், எதிர்வரும் 20 ஆம் திகதி அதிகாரத்துக்கு வருகிறது.
இந்த தருணத்தில் ட்ரம்ப் நிர்வாகத்தின் தேசிய பாதுகாப்பு ஆலோசகரான ரொபர்ட் ஓ பிரைன் முன்வைத்த, பாதுகாப்பு சார்ந்த 10 பக்க ஆவணத்தை ரகசியமற்ற ஆவணமாக வகைப்படுத்தி, அது வெள்ளை மாளிகை இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
இந்தோ-பசிபிக் அமெரிக்காவின் இராணுவம் சார்ந்த கட்டமைப்பின் தயாரிப்பான இந்த ஆவணத்தில் பாதுகாப்பு விடயங்களில் இந்தியாவின் நட்பு நாடான அமெரிக்கா கடல்சார் பாதுகாப்பு மற்றும் தெற்காசியா, தென்கிழக்கு ஆசியா மற்றும் பரஸ்பர அக்கறை கொண்ட பிற பிராந்தியங்களில் சீனாவின் ஆதிக்கத்தை எதிர்க்கின்றன.
சீனாவின் எல்லை அத்துமீறல்களை எதிர்கொள்ளும் திறனை இந்தியா பராமரித்து வருகிறது.
தெற்காசியாவில் இந்தியா முதன்மையானது. இந்திய பெருங்கடல் பாதுகாப்பை பேணுவதில், அது முக்கிய பங்கு வகிக்கிறது.
தென்கிழக்கு ஆசியாவுடனான ஈடுபாட்டையும் அந்த நாடு அதிகரிக்கிறது. மேலும் தனது பொருளாதார, இராணுவ, தூதரக ஒத்துழைப்பை அமெரிக்க நட்பு நாடுகள் மற்றும் பிராந்தியத்தில் உள்ள பிற நட்பு நாடுகளுடன் விரிவுபடுத்துகிறது.
ஒரு வலுவான இந்தியா, இதர நாடுகளின் ஒத்துழைப்புடன் சீனாவுக்கு சரிநிகராக எதிர்நிலையில் நின்று செயல்படும்.
அமெரிக்காவும், ஒவ்வொரு கண்டத்திலும் உள்ள அதன் நட்பு தங்கள் இறையாண்மையை பலவீனப்படுத்தும் நோக்கில் செயல்படும் சீனாவின் நடவடிக்கைகளை எதிர்க்கின்றன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM