கிளிநொச்சியில் வெள்ளத்தால் 807 குடும்பங்களைச்  சேர்ந்த 2600 பேர் பாதிப்பு

Published By: Digital Desk 4

14 Jan, 2021 | 09:19 PM
image

தொடர்ச்சியாக பெய்து வரும் கன மழை காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தில் இன்றுவரை(14) 807 குடும்பங்களைச் சேர்ந்த 2600 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த  முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது. 

அத்தோடு பல கிராமங்களில் சில பிரதேசங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாகவும், போக்குவரத்துக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும்  மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.

அந்த வகையில் கரைச்சி பிரதேச செயலக பிரிவில் 262 குடும்பங்களைச் சேர்ந்த 935 பேரும், கண்டாவளையில் 245 குடும்பங்களைச் சேர்ந்த 736 பேரும், பூநகரியில் 88 குடும்பங்களைச் சேர்ந்த  263 பேரும், பச்சிலைப்பள்ளி பிரதேசத்தில் 212  குடும்பங்களைச் சேர்ந்த 666 பேரும் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பொது மக்களின்  தற்காலி மற்றும் நிரந்தர வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்துள்ளமையால்  அவர்களின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளதோடு பலர் இடம்பெயர்ந்து பொது  இடங்களில் தங்கியுள்ளனர்.

பிரதேச செயலக ஊழியர்கள், இராணுவம் ஆகியோர் பாதிக்கப்பட்டுள்ள இடங்களில் மக்களுக்கு தேவையான உதவிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22