முகக் கவசம் அணியத் தவறியமை உள்ளிட்ட சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றத் தவறியமைக்காக சுமார் 10 ஆயிரம் நபர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேல் மாகாணத்தில் நேற்றைய தினம் முகக் கவசம் அணியாதிருப்பது கண்டறியப்பட்ட 137 நபர்கள் மீது விரைவான அன்டின் பரிசோதனைகள் நடத்தப்பட்டன.
ஜனவரி 05 ஆம் திகதி முதல் இவ்வாறான சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றத் தவறிய 2,530 நபர்கள் மீது அன்டிஜன் பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. அதில் 48 பேர் கொரோனா தொற்றுக்குள்ளானமையும் அடையாளம் காணப்பட்டுள்ளது.
இவ்வாறு அடையாளம் காணப்பட்ட கொரோனா நோயாளர்கள் கொவிட் சிகிச்சை நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டும் உள்ளனர்.
அவர்களுடன் நெருங்கிய தொடர்புகளை பேணிய குற்றச்சாட்டுக்காக 400 க்கும் மேற்பட்டவர்களை தனிமைப்படுத்தலுக்கு உட்படுமாறும் பொலிஸார் வலியுறுத்தியுள்ளனர்.
இதேவேளை மேல் மாகாணத்திற்கு வெளியே முகக் கவசம் மற்றும் சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றத் தவறியமைக்காக 28 பேர் நேற்றைய தினம் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இது தொடர்பான குற்றச்சாட்டுகளுக்காக ஒக்டோபர் 30 ஆம் திகதி முதல் இதுவரையான காலப் பகுதி வரை மொத்தம் 2,490 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM