ஜனாதிபதியின் நகர்வுகள் சர்வாதிகார ஆட்சிக்கான முன்னோட்டம் என்கிறது ஐக்கிய தேசியக் கட்சி

Published By: Digital Desk 4

13 Jan, 2021 | 09:37 PM
image

(எம்.மனோசித்ரா)

அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தம் நிறைவேற்றப்பட்டதன் பின்னர் பாராளுமன்றம் எவ்வாறு செயற்படப் போகிறது என்பது ஹரின் பெர்னாண்டோவின் உரைக்கு ஜனாதிபதியால் வழங்கப்பட்ட பதிலூடாக தெளிவாகிறது.

எதிர்காலத்தில் உருவாகக் கூடிய சர்வாதிகார ஆட்சியின் ஆரம்பமாகவே இதனை பெருமளவானோர் கருதுகின்றனர் என்று ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்துள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோவின் உரை தொடர்பில் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ மக்கள் சந்திப்பொன்றின் போது தெரிவித்த கருத்துக்களை கடுமையாக எதிர்ப்பதாகவும் ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்துள்ளது.

இன்று புதன்கிழமை கட்சி தலைமையகமான சிறிகொத்தாவில் நடைபெற்ற மத்திய குழு கூட்டத்தின் போது இவ்விடயம் பற்றி அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பில் ஐ.தே.க. பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டாரவினால் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது :

ஜனாதிபதியின் இந்த கருத்துக்களின் ஊடாக அவருக்கு வாக்களித்த மக்கள் உட்பட பெருமளவானோர் அதிருப்தியடைந்துள்ளனர்.

அவர் தெரிவித்த கருத்துக்களின் ஊடாக ஜனாதிபதியாக பதவியேற்ற போது அரசியலமைப்பினை ஏற்றுக் கொள்வதாக உறுதி பூண்டதையு;ம அவர் மீறியுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

ஹரின் பெர்னாண்டோ பாராளுமன்றத்தில் ஆற்றிய உரைக்கு அங்குள்ளவர்களாலேயே கருத்து தெரிவிக்கப்பட்டிருக்க வேண்டும்.

ஆனால் ஜனாதிபதியால் அந்த உரைக்கு பதில் கூறும் வகையில் பாராளுமன்ற உறுப்பினரொருவருக்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தலானது பாராளுமன்ற அதிகாரம் மற்றும் வரப்பிரசாதத்தை மீறும் செயலாகும் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.

அத்தோடு இது இலங்கையின் ஜனநாயகத்தின் மீது தாக்குதலை மேற்கொள்வதைப் போன்றதாகும். அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தம் நிறைவேற்றப்பட்டதன் பின்னர் பாராளுமன்றம் எவ்வாறு செயற்படப் போகிறது என்பது தெளிவாகிறது. இதனை பெருமளவானோர் எதிர்காலத்தில் உருவாகக் கூடிய சர்வாதிகார ஆட்சியின் ஆரம்பமாகவே கருதுகிறார்கள்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-18 12:44:55
news-image

உக்ரைன் போருக்கு இலங்கையர்களை அனுப்பிய ஓய்வு...

2024-04-18 12:23:02
news-image

தேர்தல்களை பிற்போடுவதை கடுமையாக எதிர்ப்போம் -...

2024-04-18 11:52:31
news-image

கடலில் குழந்தை பிரசவித்த நயினாதீவு பெண்

2024-04-18 11:40:05
news-image

மைத்திரிபால சிறிசேனவிற்கு தடை உத்தரவு நீடிப்பு!

2024-04-18 12:12:09
news-image

14 வாரங்களில் 7 இலட்சம் சுற்றுலாப்...

2024-04-18 11:56:42
news-image

யாழ்.கட்டைக்காட்டில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட படகு...

2024-04-18 12:40:37
news-image

மதுபோதையிலிருந்த நபரால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-04-18 11:11:00
news-image

இரு பெண்களின் சடலங்கள் வீட்டிலிருந்து மீட்பு...

2024-04-18 09:45:24
news-image

யாழ்ப்பாணத்தில் கசிப்பினை பொதி செய்துகொண்டிருந்த பெண்...

2024-04-18 08:47:07
news-image

இன்றைய வானிலை

2024-04-18 06:04:36
news-image

ஹிருணிகாவுக்கு அழைப்பாணை

2024-04-18 02:38:02