(செ.தேன்மொழி)
மேல்மாகாணத்திலிருந்து வெளியேறும் நபர்களுக்கு மீண்டும் அன்டிஜன் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித்ரோஹண தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது ,
மேல்மாகாணத்திலிருந்து வெளியேறும் நபர்களை இலக்குவைத்து மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனைகள் இன்று முதல் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
அதற்கமைய மேல்மாகாணத்திலிருந்து வெளி பிரதேசங்களுக்கு செல்வதற்காக பயன்படுத்தப்படும் 11 பகுதிகளிலும் இவ்வாறு அன்டிஜன் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
இந்நிலையில் , நாளை இடம்பெறவுள்ள தைப் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மேல்மாகாணத்திலிருந்து பலரும் வெளிமாவட்டங்களுக்கு செல்வதற்கான வாய்ப்புள்ளது.
அதனால் , இவ்வாறு வெளி பிரதேசங்களுக்கு செல்லும் நபர்கள் ஊடாக ஏனைய பகுதிகளில் கொவிட்-19 வைரஸ் பரவலடைந்து புதிய கொத்தணிகள் உருவாகுவதற்கு வாய்ப்புள்ளது. என்பதன்காரணமாகவே அதனை தடுக்கும் வகையில் இவ்வாறு அன்டிஜன் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
இதன்போது மேல்மாகாணத்திலிருந்து வெளியேறும் அனைவரையும் இந்த அன்டிஜன் பரிசோதனை நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக் கொள்கின்றோம்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM