சிங்க வேடமிட்டுள்ள நரிகளுக்கு சிங்கள மக்கள் ஏமாற மாட்டார்கள் - பியல் நிஷாந்த

13 Jan, 2021 | 05:16 PM
image

(இராஜதுரை ஹஷான்)

சிங்கம் போன்று வேடமிட்டுள்ள அரசியல் நரிகளின் கருத்துக்களுக்கு புத்திசாலிகளான சிங்கள பெரும்பான்மையின மக்கள் ஏமாறமாட்டார்கள்.

அஸாத்சாலி போன்ற அரசியல்வாதிகள் சிங்கள- முஸ்லிம் சமூகத்திற்கிடையில் இனவாதத்தை ஏற்படுத்தி அதனூடாக அரசியல் இலாபம் தேட முனைகிறார்கள்.

இவ்வாறான செயற்பாடு ஒருபோதும் வெற்றிப்பெறாது என பாடசாலை உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் கல்வி சேவை இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த தெரிவித்தார்.

களுத்துறை பிரதேசத்தில் இன்று புதன்கிழமை இடம் பெற்ற நிகழ்வில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

கொவிட்-19 வைரஸ் தொற்றால் உயிரிழப்பவர்களின் சடலங்களை அடக்கம் செய்வதா,தகனம் செய்வதா என்ற விடயத்தில் அரசியல் தலையீடுகள் ஏதும் இல்லாமல் சுகாதார தரப்பினரால் சிறந்த தீர்மானம் தற்போது எடுக்கப்பட்டுள்ளது.

சுகாதார பிரிவினரின் தீர்மானத்தை நாட்டு மக்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ள  வேண்டும். இவ்விடயத்தில் முரண்பட்டுக்  கொள்வது பயனற்றது.

அஸாத்சாலி போன்றோர் அரசியல் சுயதேவைக்காக சிங்கள- முஸ்லிம் மக்கள் மத்தியில் தேவையற்ற பிரச்சினையை ஏற்படுத்த முனைகிறார்கள்.

பல வழிமுறைகளில் பலம் கொண்டு செயற்பட்ட விடுதலை புலிகள் அமைப்பினை தோற்கடித்து பிரிவினைவாதம் முடிவுக்கு கொண்டு வந்தது.

நாட்டில் மீண்டும் பிரிவினைவாதத்தை ஏற்படுத்த முயற்சிக்கும்,தனிநபர்களுக்கும்,அடிப்படைவாத அமைப்புக்களுக்கும் விடுதலை புலிகளின் நிலைமையை ஏற்படுத்த அரசாங்கம் ஒருபோதும் பின்வாங்காது.

கடந்த அரசாங்கம் தேசிய பொருளாதாரத்தையும், தேசிய பாதுகாப்பினையும் திட்டமிட்டு பலவீனப்படுத்தியது. நல்லாட்சியின் பலவீனம் ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதலுடன் வெளிப்பட்டது.

நல்லாட்சியின அதிகாரம் செலுத்தியவர்கள் இன்று எதிர்க்கட்சியாக செயற்படுகிறார்கள்.இவர்கள் தற்போது அரசியலுக்கு ஏதோ புதிதாக வந்துள்ளமை போன்று கருத்துரைக்கிறார்கள்.

சிங்கம் போன்று வேடமிட்டுள்ள நரிகளின் கருத்துக்களுக்கு சிங்கள பெரும்பான்மையினை மக்கள் ஏமாற்றமடையமாட்டார்கள்.

நல்லாட்சி அரசாங்கத்தின் பலவீனத்தை அறிந்தே நாட்டு மக்கள் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தலைமையில் பலமான அரசாங்கத்தை ஸ்தாபித்துள்ளார்கள்.

அரசியல் நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டு அரசாங்கத்திற்கு எதிராக முன்வைக்கும் குற்றச்சாட்டுக்கள் எவ்வித பாதிப்பையும் அரசாங்கத்தில் ஏற்படுத்தாது என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு கோழி இறைச்சி...

2024-04-18 17:43:51
news-image

மாளிகாகந்த நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட சந்தேக...

2024-04-18 17:24:50
news-image

திருகோணமலை வைத்தியசாலையில் நோயாளர் காவு வண்டிகள்...

2024-04-18 17:13:38
news-image

வரலாற்றில் இன்று : 1956 ஏப்ரல்...

2024-04-18 17:01:15
news-image

கோட்டா என்னை ஏமாற்றினார் - மல்கம்...

2024-04-18 16:58:51
news-image

திரியாய் தமிழ் மகாவித்தியாலயத்தின் குடிநீர்ப் பிரச்சினைக்கு...

2024-04-18 16:51:36
news-image

கட்டுத்துப்பாக்கி வெடித்ததில் குடும்பஸ்தர் காயம் -...

2024-04-18 16:18:49
news-image

"வசத் சிரிய - 2024" புத்தாண்டு...

2024-04-18 16:25:36
news-image

அட்டன் – கொழும்பு மார்க்கத்தில் மாத்திரமே...

2024-04-18 16:20:52
news-image

கண்டி நகரில் தீவிரமடையும் குப்பை பிரச்சினை!

2024-04-18 16:31:50
news-image

காத்தான்குடி பாலமுனை கடற்கரையில் பெண் ஒருவரின்...

2024-04-18 15:52:14
news-image

பிட்டிகல பகுதியில் துப்பாக்கிச் சூடு ;...

2024-04-18 15:42:00