மட்டக்களப்பு மாநகர சபை பிரதேசத்தில் உணவு கட்டளை சட்டத்தின் ஒழுங்கு விதிகளுக்கு முரணான முறையில் போலி லேபல்கள் இட்டு பொதி செய்யப்பட்ட உணவுப் பொருட்களை விற்பனை செய்த 19 வர்த்தகர்கள் சுகாதார அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டதாக கல்லடி பிரதேசத்திற்குப் பொறுப்பான பொது சுகாதார பரிசோதகர் கே.ஜெய்சங்கர் தெரிவித்தார்.
கல்லடி பிரதேசத்தில் வர்த்தக நிலையங்கள் மீதான திடீர் சுற்றிவளைப்பின்போதே இவர்கள் கைது செய்யப்பட்டனர். குறித்த வர்த்தக நிலையங்களிலுமிருந்து 6 வகையான சட்டவிரோதமான முறையில் போலி லேபலுடன் பொதி செய்யப்பட்ட உணவுப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
இவர்கள் நேற்று மாலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். ஒரு வர்த்தகருக்கு 10 000 ரூபாவை அபராதமாக மட்டக்கள்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி என்.எம்.அப்துல்லாஹ் விதித்தார்.
ஏனையோர்கள் மீது எதிர்வரும் ஜனவரி 18ம் திகதி வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM