தொழிலாளர் நஷ்டஈட்டுத்தொகையை அதிகரிக்க தீர்மானம்

Published By: Gayathri

12 Jan, 2021 | 07:49 PM
image

(இராஜதுரை ஹஷான்)

தொழிலாளர்கள் பணியிலிருந்து நீக்கப்படும்போது வழங்கப்படும் நட்டஈட்டுத்தொகையை 12 இலட்சத்தில் இருந்து 25 இலட்சமாக அதிகரிக்க தொழிற்துறை அமைச்சர் முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

2003ஆம் ஆண்டு 12 ஆம் இலக்க சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ள 1971 ஆம் ஆண்டு 45 ஆம் இலக்க தொழிலாளர்களின் தொழில் முடிவுறுத்தல் (விசேட ஏற்பாடுகள்) சட்டம் தொழிலாளர்களின் சேவையை முடிவுறுத்தும்போது சலுகை வழங்கும் நோக்கில் கொண்டுவரப்பட்டுள்ளது.

குறித்த சட்டத்தின் ஏற்பாடுகளுக்கமைய தொழிலாளர்களின் சேவை முடிவுறுத்தும்போது அவர்களுக்கு செலுத்த வேண்டிய நட்டஈட்டுத் தொகை தீர்மானிப்பதற்கான சூத்திரமொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

அதற்கமைய தொழில் உறவுகள் அமைச்சரால் கொண்டுவரப்பட்ட ஒழுங்குவிதிகளை அடிப்படையாகக்கொண்டு தொழிலாளர்கள் பணிபுரிந்த காலத்தை கருத்திற்கொண்டு நட்டஈடு தீர்மானிக்கப்படும். 

அவ்வாறாயினும் குறித்த சூத்திரத்துக்கமைய கணிப்பிடும்போது ரூபா 1,250,000 இற்கு அதிகரிக்கப்படாத ஏற்பாட்டுக்கு குறித்த ஒழுங்குவிதிகளில் உள்வாங்கப்பட்டிருப்பதால் நியாயமற்ற வகையில் தொழிலாளர்கள் பணியிலிருந்து நீக்கப்படும்போதும், நிறுவனம் மூடப்படும் போதும், தொழிலை இழக்கும்போதும் உயர் சம்பளத்தை பெறும் பணியாளர்களுக்கு கிடைக்கும் நட்டஈடு குறைவாக இருக்கின்றமை தெரியவந்துள்ளது.

குறித்த விடயத்தை கவனத்திற்கொண்டு செலுத்தப்படவேண்டிய உயர்ந்தபட்ச நட்டஈட்டுத் தொகையை ரூபா 1,250,000 இலிருந்து ரூபா 2,500,000 தொழிற்துறை அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தண்டனைச்சட்டக்கோவையின் 363, 364 ஆம் பிரிவுகளைத்...

2024-03-29 19:35:09
news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13