(இராஜதுரை ஹஷான்)
உக்ரைன் நாட்டு சுற்றுலாப் பயணிகளினால் கொவிட்-19 வைரஸ் கொத்தணி ஒருபோதும் தோற்றம் பெறாது. சுகாதார பாதுகாப்பு வழிமுறைகளை முழுமையாக செயற்படுத்தி மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளது. குறுகிய காலத்தில் சுற்றுலாத்துறை அபிவிருத்தி செய்யப்படும் என அமைச்சரவை இணைப்பேச்சாளர் உதய கம்மன்பில தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில், தேசிய பொருளாதாரத்தில் சுற்றுலாத்துறை சேவை கைத்தொழில் பாரிய பங்களிப்பு செலுத்துகிறது. கொவிட்-19 வைரஸ் தாக்கத்தினால் சுற்றுலாத்துறை சேவை கைத்தொழில் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. சுற்றுலாத்துறை சேவையில் 30 இலட்சத்துக்கு மேற்பட்டோர் ஈடுப்பட்டுள்ளார்கள். இவர்களின் வாழ்க்கைத்தரம் பல வழிமுறைகளில் பாதிக்கப்பட்டுள்ளதுடன், வாழ்க்கை தரத்தை மேம்படுத்தவே சுற்றுலாத்துறை சேவை மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
கடந்த 8 ஆம் திகதி வரை உக்ரைன் நாட்டு சுற்றுலாப்பிரயாணிகள் 1,004 பேர் நாட்டுக்கு வருகை தந்துள்ளார்கள், இவர்களில் 3 பேர் மாத்திரம் கொவிட்-19வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ளார்கள். இவர்களும் சுகாதார பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்கள். ஆகவே உக்ரைன் நாட்டு சுற்றுலாப்பிரயாணிகளினால் கொவிட்-19 கொத்தணி ஒருபோதும் தோற்றம் பெறாது.
கொவிட்-19 வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்த அறிமுகப்படுத்தியுள்ள சுகாதார பாதுகாப்பு அறிவுறுத்தல்கள் அனைவருக்கும் பொதுவானது. சுற்றுலாப் பிரயாணிகளுக்கு எவ்வித சிறப்பு சலுகைகளும் இவ்விடயத்தில் வழங்கப்படவில்லை. ஆகவே உக்ரைன் பயணிகள் குறித்து எதிர்தரப்பினர் குறிப்பிடும் கருத்துக்கள் பொய்யானது.
தேசிய பொருளாதாரத்தை மேம்படுத்த வேண்டுமாயின், சுற்றுலாத்துறையினை நெருக்கடியான நிலையில் ஆரம்பிக்க வேண்டும். குறுகிய காலத்தில் சுற்றுலாத்துறை சேவை கைத்தொழில் அபிவிருத்தி செய்யப்படும். கொவிட்-19 வைரஸ் தாக்கத்தினால் எழுந்துள்ள சவால்களை வெற்றிக் கொள்வது கட்டாயமாகும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM