மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞர் பலி

Published By: Vishnu

12 Jan, 2021 | 07:50 AM
image

திருகோணமலை - ஹொரவ்பொத்தானை பிரதான வீதியின் கன்னியா கற்குவாரி வளைவில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இச் சம்பவம் நேற்றிரவு 10 மணியளவில்  இடம்பெற்றுள்ளது.

விபத்தில் உயிரிழந்தவர் புல்மோட்டைஅரபாத் நகர் பகுதியைச் சேர்ந்த என்சிலூன் முஜிபுர் ரஹ்மான் (29வயது) என்பவர் ஆவார்.

அவரது சடலம் பிரேத பரிசோதனைக்ககாக திருகோணமலை பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், உப்புவெளி பொலிஸார் இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்