பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனுக்கு கொரோனா வைரஸ் தொற்று இல்லை என்று மருத்துவ அறிக்கை கிடைத்துள்ளதாக வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.
“யாழ்ப்பாணம் மாநகர சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவினரால் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனின் மாதிரிகள் பெறப்பட்டு பல்கலைக்கழக மருத்துவ பீட ஆய்வுகூடத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டன.
அதன் பி.சி.ஆர் பரிசோதனை அறிக்கை நேற்று இரவு 9.30 மணிக்கு வெளியாகியுள்ளது.
அதில் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனுக்கு கொரோனா வைரஸ் தொற்று இல்லை என்று அறிக்கை கிடைத்துள்ளது” என்றும் வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் குறிப்பிட்டார்.
பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீமுக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை உறுதிப்படுத்தப்பட்டது.
அதனால் கடந்த 5 ஆம் திகதி பாராளுமன்றில் அவருடன் நெருக்கமாகப் பழகியவர்களில் ஒருவரான எம்.ஏ.சுமந்திரன் நேற்று சுயதனிமைப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM