(நா.தனுஜா)
உயிரிழந்த அப்பாவிப் பொதுமக்களை நினைவுகூருவதில் அரசாங்கத்திற்கு எந்தவொரு பிரச்சினையும் இல்லை என்று அமைச்சர் சரத் வீரசேகர கூறியிருக்கிறார்.
அவ்வாறெனில், எதிர்வரும் மே மாதம் எவ்வித அடக்குமுறைகளோ சட்டரீதியான தடைகளோ இன்றி போரில் உயிரிழந்தவர்களை நினைவுகூருவதற்கு தமிழர்கள் அனுமதிக்கப்படுவார்களா? என்று மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் சட்டத்தரணி அம்பிகா சற்குணநாதன் கேள்வி எழுப்பியிருக்கிறார்.
அவர் மேலும் கூறியிருப்பதாவது:
நினைவுத்தூபியின் ஊடாக அப்பாவிப் பொதுமக்களை நினைவுகூருதல் என்ற போர்வையில் பயங்கரவாதிகளே நினைவுகூரப்படுகின்றனர் என்பதற்கான ஆதாரம் என்ன? அதேபோன்று போரின்போது உயிரிழந்தவர்களைத் தமிழர்கள் நினைவுகூருவதில் அரசாங்கத்திற்கு எவ்வித பிரச்சினையும் இல்லையென்றால், கடந்த 2020 மே மாதம் உயிரிழந்த பொதுமக்களை நினைவுகூருவது ஏன் தடைசெய்யப்பட்டது?
இவையனைத்திற்கும் மேலாக சரத் வீரசேகரவின் டுவிட்டர் பதிவின்படி, எதிர்வரும் மேமாதம் எவ்வித அடக்குமுறைகளோ, சட்டரீதியான தடைகளோ, இடையூறுகளோ இன்றி போரில் உயிரிழந்தவர்களை நினைவுகூருவதற்கு தமிழர்கள் அனுமதிக்கப்படுவார்களா? என்று அம்பிகா சற்குணநாதன் கேள்வி எழுப்பியிருக்கிறார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM