போரில் உயிரிழந்தவர்களை நினைவுகூர தமிழர்கள் அனுமதிக்கப்படுவார்களா? - அம்பிகா சற்குணநாதன்

Published By: Gayathri

11 Jan, 2021 | 09:05 PM
image

(நா.தனுஜா)

உயிரிழந்த அப்பாவிப் பொதுமக்களை நினைவுகூருவதில் அரசாங்கத்திற்கு எந்தவொரு பிரச்சினையும் இல்லை என்று அமைச்சர் சரத் வீரசேகர கூறியிருக்கிறார். 

அவ்வாறெனில், எதிர்வரும் மே மாதம் எவ்வித அடக்குமுறைகளோ சட்டரீதியான தடைகளோ இன்றி போரில் உயிரிழந்தவர்களை நினைவுகூருவதற்கு தமிழர்கள் அனுமதிக்கப்படுவார்களா? என்று மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் சட்டத்தரணி அம்பிகா சற்குணநாதன் கேள்வி எழுப்பியிருக்கிறார்.

அவர் மேலும் கூறியிருப்பதாவது:

நினைவுத்தூபியின் ஊடாக அப்பாவிப் பொதுமக்களை நினைவுகூருதல் என்ற போர்வையில் பயங்கரவாதிகளே நினைவுகூரப்படுகின்றனர் என்பதற்கான ஆதாரம் என்ன? அதேபோன்று போரின்போது உயிரிழந்தவர்களைத் தமிழர்கள் நினைவுகூருவதில் அரசாங்கத்திற்கு எவ்வித பிரச்சினையும் இல்லையென்றால், கடந்த 2020 மே மாதம் உயிரிழந்த பொதுமக்களை நினைவுகூருவது ஏன் தடைசெய்யப்பட்டது?

இவையனைத்திற்கும் மேலாக சரத் வீரசேகரவின் டுவிட்டர் பதிவின்படி, எதிர்வரும் மேமாதம் எவ்வித அடக்குமுறைகளோ, சட்டரீதியான தடைகளோ, இடையூறுகளோ இன்றி போரில் உயிரிழந்தவர்களை நினைவுகூருவதற்கு தமிழர்கள் அனுமதிக்கப்படுவார்களா? என்று அம்பிகா சற்குணநாதன் கேள்வி எழுப்பியிருக்கிறார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-19 12:26:04
news-image

கலால் திணைக்களத்தின் அதிகாரி பணி இடைநிறுத்தம்!

2024-04-19 12:25:16
news-image

அநுர, சஜித் சிறு பிள்ளைகள், நாட்டைக்...

2024-04-19 12:12:49
news-image

நச்சுத்தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 10 பெண்கள் உட்பட...

2024-04-19 12:10:56
news-image

செவ்வாய் கிரகத்தில் வாழ்வது எப்படி :...

2024-04-19 12:31:10
news-image

கடுகண்ணாவை நகரை சுற்றுலாத் தலமாக அபிவிருத்தி...

2024-04-19 11:42:14
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு 71 வயதான...

2024-04-19 11:48:31
news-image

பிரிட்டிஸ் சிறுவர்களிற்கு வழங்கும் அதேபாதுகாப்பை டியாகோர்கார்சியாவில்...

2024-04-19 11:32:34
news-image

சுதந்திரக் கட்சியின் உள்ளக விவகாரங்களில் தலையிடும்...

2024-04-19 11:35:43
news-image

போதைப்பொருள் மாத்திரைகளை வைத்திருந்த இருவர் புல்மோட்டையில்...

2024-04-19 11:35:04
news-image

கொஸ்கமவில் லொறி கவிழ்ந்து விபத்து ;...

2024-04-19 11:17:01
news-image

அருட்தந்தை தந்தை சிறில் காமினி குற்றப்...

2024-04-19 11:03:22