(எம்.மனோசித்ரா)
நாட்டில் எதிர்வரும் நாட்களுக்கு மழையுடனான காலநிலை தொடரும் என்று இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன் போது வடக்கு , கிழக்கு , வட-மத்திய மாகாங்களில் 150 மில்லி மீற்றருக்கும் அதிக மழை வீழ்ச்சி பதிவாகக் கூடும் என்றும் , சில பகுதிகளில் சிறியளவிலான வெள்ள அபாயம் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருவலகஸ்வெவ, வணாத்தவில்லு பிரதேச செயலாளர் பிரிவுகளில் கலா ஓயா பெருக்கெடுக்கும் என்பதால் தாழ்நிலப் பகுதிகளில் வெள்ள நிலைமை ஏற்படக்கூடும் என நீர்ப்பாசனத் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இன்று காலை 11.30 மணியளவில் இராஜாங்கனை நீர்த் தேக்கத்தின் வான் கதவுகள் அனைத்தும் திறந்து விடப்பட்டிருந்த நிலையில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
கடற்பிரதேசங்களில் புத்தளம் தொடக்கம் திருகோணமலை வழியாக காங்கேசன்துறை வரையான பகுதிகளில் காற்றின் வேகமானது மணித்தியாலத்திற்கு 60 - 70 கிலோ மீற்றர் வேகத்தில் வீசக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
எனவே கடற்றொழிலில் ஈடுபடுவபர்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நாட்டின் சில பகுதிகளில் மழையுடன் கூடிய காலநிலையுடன் பனிமூட்டம் காணப்படும் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
வடக்கு , கிழக்கு , வட-மத்திய ஆகிய மாகாணங்களில் 150 மில்லி மீற்றரை விட அதிக மழை வீழ்ச்சி பதிவாகக் கூடும். ஏனைய மாகாணங்களில் 100 மில்லி மீற்றரை விட அதிக மழைவீழ்ச்சி பதிவாகக் கூடும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM