(இராஜதுரை ஹஷான்)
ஜனாதிபதி என்ற கதாபாத்திரத்தை விட பாதுகாப்பு செயலாளர் என்ற கதாபாத்திரத்தையே மகாசங்கத்தினர் அதிகம் எதிர்பார்க்கிறார்கள். தேவையாயின் பாதுகாப்பு செயலாளர் என்ற கதாபாத்திரத்திலும் செயற்படதயார் என்று ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அரசியல் நோக்கங்களின்றி நாட்டு மக்களுக்கு சேவையாற்ற தயராக உள்ளேன். அரசியல் நோக்கங்களுடன் செயற்படதயாரில்லை எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
நேற்று முன்தினம் சனிக்கிழமை அம்பாறை உஹனவில-லாத்துகல கிராமத்தில் இடம்பெற்ற 'கிராமத்துடன் உரையாடல்' நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றும் போது இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறுகையில் ,
அரசியல் நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டு செயற்பட தயாரில்லை. அரசியல் பழிவாங்கள் இல்லாமல் சிறந்த முறையில் செயற்பட தயாராக உள்ளோம். சட்டத்திற்கு புறம்பாக செயற்பட்டவர்கள். சட்ட நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்கள். இதனை எதிர்தரப்பினர் தெரிந்துக் கொள்ள மறுக்கிறார்கள். எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹரின்பெர்ணான்டோ அண்மையில் பாராளுமன்றில் ஆற்றிய உரை ஏற்றுக் கொள்ள முடியாது.
கடந்த கால முறைமைகளை விட வித்தியாசமான முறையில் செயற்பட எதிர்பார்த்துள்ளோம். மகாசங்கத்தினரும் இதனையே எதிர்பார்க்கிறார்கள். அரசியல் நோக்கங்களை முன்னிலைப்படுத்தி செயற்பட தயாராகயில்லை. நந்தசேன கோத்தாபயவின் 2 கதாபாத்திரங்களில் ஜனாதிபதி என்ற கதாபாத்திரம் வேண்டாம். முன்பு இருந்த பாதுகாப்பு செயலாளர் என்ற கதாபாத்திரம் வேண்டும் என மகாசங்கத்தினர் கோருகிறார்கள். சற்று இறுக்கமாக செயற்பட வேண்டும் எண்ணுகின்றனர். அதனையும் செய்ய முடியும். கடினமான முறையில் செயற்பட்டால் இறுக்கமாகவும் என்னால் செயற்பட முடியும்.
பித்தளை சந்தியில் குண்டுத்தாக்குதலை நடத்தி பிரபாகரன் தனது செயற்பாடுகளை ஆரம்பித்தார். நான் பாதுகாப்பு செயலாளராக செயற்பட்ட காலத்தில் நாயை போல் விடுதலை புலிகள் அமைப்பை நந்திக்கடலில் வீழ்த்தினோம். இம்முறைமைக்கும் கொண்டு வர முடியும். அனைத்து சவால்களையும் வெற்றிக் கொள்ளும் கதாபாத்திரம் நான். நாட்டு மக்களுக்கு சேவையாற்றுவதே எனது நோக்கம் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM