வவுனியா பட்டாணிச்சூரை சேர்ந்த 7 பேர் உட்பட ஒன்பது பேருக்கு கொரோனா தொற்றுள்ளமை இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
வவுனியா பட்டாணிசூர் பகுதியில் 7 பேருக்கு கொரோனா தொற்று உள்ளமை கடந்த வாரம் உறுதிசெய்யப்பட்டது.
இந் நிலையில் பட்டாணிச்சூர் கிராமம் கடந்த ஒருவாரமாக முடக்கப்பட்டிருந்ததுடன் குறித்த நபர்களுடன் தொடர்புகளை பேணிய பலருக்கு பி.சி.ஆர் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டிருந்தது.
இதேவேளை வவுனியா பட்டாணிசூர் பகுதியை சேர்ந்த 146 பேரில் நேற்று முன்தினம் பி.சி.ஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில் 100 பேருக்கு தொற்றில்லை என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
எனினும் அவர்களில் 40 பேரின் முடிவுகள் மீளவும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது. அவர்களில் பட்டாணிசூர் பகுதியை சேர்ந்த 6 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் ஒருவரது மாதிரிகள் மீளவும் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
இதேவேளை வவுனியாநகர வியாபார நிலையங்களில் நேற்று முன்னெடுக்கப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனைகளில் 106 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்படாத நிலையில் 36 பேரது மாதிரிகள் மீளவும் பரிசோதனைக்கு அனுப்பப்படவுள்ளது.
இதேவேளை வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் மொத்தமாக 9 பேருக்கு இன்றையதினம் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை கடந்த ஒருவாரத்தில் வவுனியாவின் கொரோனா தொற்றாளர்கள் எண்ணிக்கை 69ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM