கிழக்கு லடாக்கின் சுசுல் செக்டரில் உள்ள குருங் மலைக்கு அருகே இந்திய இராணுவத்தினர் தடுத்து வைக்கப்பட்டுள்ள சீன சிப்பாயை உடனடியாக திருப்பி அனுப்புமாறு சீனா வலியுறுத்தல் விடுத்துள்ளது.
இருள் மற்றும் சிக்கலான புவியியல் காரணமாக, சீன மக்கள் விடுதலை இராணுவத்தின் (பி.எல்.ஏ) எல்லை பாதுகாப்புப் படையின் ஒரு சிப்பாய் சீனா-இந்தியா எல்லையில் வெள்ளிக்கிழமை அதிகாலை வழிதவறிச் சென்றதாக பி.எல்.ஏ. டெய்லி நடத்தும் சீன மிலிட்டரி இணையத்தளம் சனிக்கிழமையன்று சுட்டிக்காட்டியுள்ளது.
காணாமல்போன சீன சிப்பாயைத் தேடுவதற்கும் மீட்பதற்கும் இந்திய தரப்பு உதவக்கூடும் என்று நம்புகின்றோம் என்றும் குறித்த இணையத்தளம் தெரிவித்துள்ளது.
சீன சிப்பாய் காணாமல் போன இரண்டு மணி நேரத்திற்குப் பிறகு அவர் பிடிபட்டதை இந்தியா உறுதிப்படுத்தியது.
எவ்வாறெனினும் உயர் அதிகாரிகளின் அறிவுத்தல்களைத் தொடர்ந்து குறித்த சிப்பாயை சீனாவுக்குத் திருப்பி அனுப்பப்படுவார் என்று இந்தியா உறுதியளித்தாகவும்
திரும்பப் பெறுவார் என்றும் இந்தியா கூறியதாகவும் மிலிட்டரி இணையத்தளம் குறிப்பிட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM