பணிக்கு திரும்­பாத ஊழி­யர்­கள் பணியில் இருந்து நீங்­கி­ய­வர்­க­ளாக கரு­தப்­ப­டு­வார்கள் : மொஹான்

Published By: Robert

05 Aug, 2016 | 09:37 AM
image

வேலை நிறுத்தப் போராட்­டத்தில் ஈடு­பட்­டுள்ள பல்­க­லைக்­க­ழக கல்வி சாரா ஊழி­யர்கள் இன்று முதல் கட­மைக்குத் திரும்ப வேண்டும் என அர­சாங்கம் அறி­வு­றுத்­தி­யுள்­ளது. அவ்­வாறு இன்று பணிக்கு திரும்­பாத ஊழி­யர்­கள் பணியில் இருந்து நீங்­கி­ய­வர்­க­ளாக கரு­தப்­ப­டு­வார்கள் எனவும் பல்­க­லைக்­க­ழக மானி­யங்கள் ஆணைக்­கு­ழுவின் தலைவர் மொஹான் டீ சில்வா குறிப்­பிட்­டுள்ளார்.

பல்­க­லைக்­க­ழக மானி­யங்கள் ஆணைக்­கு­ழுவின் தலை­வ­ரினால் வெளியி­டப்­பட்­டுள்ள அறிக்­கை­யி­லேயே மேற்­கு­றிப்­பிட்ட விட­யங்கள் தெளிவு­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன.இந்­நி­லையில் அர­சாங்­கத்தின் இந்த செயற்­பா­டு­களால் தமது தொழிற்­சங்க நட­வ­டிக்­கையை நிறுத்தப் போவ­தில்லை என, பல்­க­லைக்­க­ழக தொழிற்­சங்க சம்­மே­ள­னத்தின் ஒன்­றி­ணைந்த குழு ஊடகப் பேச்­சாளர் கே.எல்.டீ.ஜீ. ரிஜ்மண்ட் தெரி­வித்­தி­ருந்தார்.

கடந்த இரு வாரங்­க­ளுக்கு மேலாக பல்­க­லைக்­க­ழ­கங்­களின் கல்­வி­சாரா ஊழி­யர்கள் தங்­க­ளுக்கு அதி­க­ரிக்­கப்­பட்ட 2,500 ரூபா கொடுப்­ப­னவை அடிப்­படை சம்­ப­ளத்­துடன் சேர்ப்­பது உள்­ளிட்ட 7 முக்­கி­ய­மான கோரிக்­கை­களை முன்­வைத்து கடந்த ஜூலை ­மாதம் 14ஆம் திக­தி­யி­லி­ருந்து ஆர்ப்­பாட்­டங்­க­ளிலும் தொழிற்­சங்க நட­வ­டிக்­கை­க­ளிலும் ஈடு­பட்டு வரு­கின்­றனர். அத்­தோடு குறித்த பல்­க­லைக்­க­ழக கல்வி சாரா ஊழி­யர்கள் முன்­னெ­டுத்­துள்ள பணிப்­ப­கிஷ்­க­ரிப்­பினால் தங்­களின் கல்வி நட­வ­டிக்­கைகள் பெரிதும் பாதிக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும், பல்­க­லைக்­க­ழகங்­களின் நூல் நிலை­யங்கள் மூடப்­பட்­டி­ருந்­த­மை­யினால் மாண­வர்கள் பெரிதும் பாதிக்­கப்­பட்­டி­ருந்­த­தா­கவும் பல்­க­லைக்­க­ழக மாண­வர்கள் ஒன்­றியம் தெரிவித்துள்ளது. கொழும்பு பல்கலைக்கழகம், பேராதனைப் பல்கலைக்கழகம் உள்ளிட்ட நாட்டிலுள்ள பல பல்கலைக்கழகங்களிலும் நேற்றும் கல்வி நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டிருந்ததாகவும் மாணவர்கள் தெரிவித்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33
news-image

மக்களின் கோரிக்கைக்கு அமைய முறைமை மாற்றத்தை...

2024-04-18 20:45:44
news-image

மே மாத இறுதிக்குள் வடக்கில் 60...

2024-04-18 17:27:02
news-image

யாழில் நள்ளிரவில் சுண்ணகற்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டு...

2024-04-18 17:21:57
news-image

உண்ணாவிரதமிருந்து உயிர்நீர்த்த தியாகதீபம் அன்னை பூபதியின்...

2024-04-18 18:54:05
news-image

இராணுவ வீரர்களின் பொதுமன்னிப்பு காலம் தொடர்பில்...

2024-04-18 19:50:26
news-image

பாடசாலை சூழலில் கனரக வாகனங்கள் போக்குவரத்தில்...

2024-04-18 17:13:51
news-image

யாழில் குழாய்க்கிணறுகளை தோன்றுவதால் ஏற்படும் ஆபத்துக்கள்...

2024-04-18 17:29:02
news-image

கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு கோழி இறைச்சி...

2024-04-18 17:43:51