சுகாதார விதிமுறைகளை பேணாமைக்காக கைது செய்யப்பட்டவர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல்

Published By: Digital Desk 3

09 Jan, 2021 | 05:21 PM
image

(செ.தேன்மொழி)

முகக்கவசம் அணியாமை மற்றும் சமூக இடைவெளியை பேணாமை தொடர்பில் நாடளாவிய ரீதியில் கைது செய்யப்பட்ட நபர்களுள் 2,213 பேருக்கு எதிராக வழக்குதாக்கல் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித்ரோஹண தெரிவித்தார்.

கடந்த செவ்வாய்கிழமை முதல் மேல்மாகாணத்தில் முன்னெடுக்கப்பட்டு வரும் விசேட சுற்றிவளைப்புக்களின் போது முக்கவசம் அணியாத 2,025 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களுள் 24 பேருக்கு கொவிட்-19 வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது ,

முகக்கவசம் அணியாமை மற்றும் சமூக இடைவெளியை பேணாமை தொடர்பில் கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் தொடக்கம் இதுவரையில் 2361 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களுள் 2,213 பேருக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்படுள்ளது.

மேல்மாகாணத்தை தவிர நாட்டின் ஏனைய பகுதிகளில் நேற்று மாத்திரம் தனிமைப்படுத்தல் சட்டவிதிகளுக்கு புறம்பாக செயற்பட்டமைக்காக 26 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் அனைவருக்கும் எதிராக தனிமைப்படுத்தல் மற்றும் நோய்த்தடுப்பு சட்டவிதிகளுக்கமைய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

நாட்டில் எந்த பகுதிகளில் இருந்தாலும் தனிமைப்படுத்தல் சட்டவிதிகளை கடைப்பிடிக்கவேண்டியது கட்டாயமாகும். பொது போக்குவரத்து நடவடிக்கையில் ஈடுபடும் பேரூந்து சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் பேரூந்தின் இலக்கத்தை பயணிகள் பார்வையிடுவதற்காக  பேரூந்துக்குள் காட்சிப்படுத்தப்பட வேண்டும்.

பொது போக்குவரத்துக்களில் பயணிப்பவர்கள் கட்டாயம் அதன் இலக்கத்தை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். வைரஸ் தொற்றுக்குள்ளானவர்கள் யாராவது அந்த பேரூந்துகளில் பயணித்துள்ளதாக அடையாளம் காணப்பட்டால் , அதில் பயணித்த ஏனைய பயணிகளின் விபரங்களை அறிந்துக் கொள்வதற்கு இதனூடாக இலகுவாக இருக்கும் என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலய ஆதீனக்...

2024-04-20 10:03:15
news-image

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் விவகாரம் : பேராயர்...

2024-04-20 08:50:08
news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17