போதைப்­பொருள் கடத்­தப்­படும் மத்­திய நிலை­ய­மாக இலங்கை.!

Published By: Robert

05 Aug, 2016 | 09:12 AM
image

சர்­வ­தேச ரீதியில் போதைப்­பொருள் கடத்­தப்­ப டும் மத்­திய நிலை­ய­மாக இலங்கை விளங்­கு­கி­றது. எனவே அந்த வலை­ய­மைப்பை முறி­ய­டித்து போதைப்­பொ­ரு­ளற்ற நாடாக இலங்­கையை கட்­டி­யெ­ழுப்ப வேண்­டிய தேவை­யுள்­ளது. அதற்­கான வேலைத்­திட்­டத்தில் சக­லரும் ஒத்­து­ழைக்க வேண்டும் என பொலிஸ் மா அதிபர் பூஜித்த ஜய­சுந்­தர தெரி­வித்தார்.

'மது­சா­ர­மற்ற இலங்கை' எனும் தொனிப்­பொ­ரு­ளி­லான தேசிய மாநாடு நேற்று காலை பண்­டா­ர­நா­யக்க ஞாப­கார்த்த மாநாட்டு மண்­ட­பத்தில் நடை­பெற்­றது. அதில் கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் இதனைத் தெரி­வித்தார். அவர் மேலும் குறிப்­பி­டு­கையில்,

நாட்­டிற்குள் கடத்­தப்­படும் போதைப் பொருட்கள் அடிக்­கடி பொலி­ஸா­ரிடம் சிக்­கு­கின்­றன. அந்த தர­வு­களை நோக்­கும்­போது ஒவ்­வொரு மாதமும் போதைப் பொருள் கடத்தல் நட­வ­டிக்கை அதி­க­ரித்­தி­ருப்­ப­தனை அறிய முடி­கி­றது. இறு­தி­யாக பொலி­சா­ரினால் கைப்­பற்­றப்­பட்ட314 கிலோ கிராம் கொகைன் கென­டா­வுக்கு கொண்டு செல்­வற்­கா­க­வேகே இங்கு கொண்­டு­வ­ரப்­பட்­டுள்­ளன. எனினும் தற்­போது பொலிஸார் அதனைக் கைப்­பற்றி கனடா அர­சாங்­கத்­துடன் இணைந்து விசா­ர­ணை­களை மேற்­கொண்டு வரு­கின்­றனர்.

மேலும் பொலி­சா­ரினால் மாத்­திரம் போதைப்­பொருள் வணி­கத்தை தடுக்க முடி­யாது. அதற்கு பொது மக்­களின் ஆத­ரவு அவ­சி­ய­மாகும். எனவே பொது­மக்கள் அது தொடர்பில் பொலி­ஸா­ருக்கு தகவல் வழங்க வேண்டும். அவ்­வாறு தகவல் வழங்­கு­ப­வர்­களின் இர­க­சியத் தன்மை பாது­காக்­கப்­படும். மேலும் எமது நாட்டில் போதைப் பொரு­ளுக்­கெ­தி­ரான வேலைத் திட்­டங்­களை அர­சாங்கம் முன்­னின்று செயற்­ப­டுத்தி வரு­கி­றது. ஜனா­தி­பதி இது தொடர்பில் மிகுந்த அவ­தானம் செலுத்­து­வது வர­வேற்­கத்­தக்­கது.

போதைப்­பொருள் பாவ­னை­யினை தடுப்­ப­தற்கு அர­சாங்கம் மேலு­மொரு திட்­டத்தை அறி­மு­கப்­ப­டுத்­தி­யுள்­ளது. அத்­திட்டம் மாவட்ட மட்­டத்தில் மேற்­கொள்­ளப்­ப­டு­கி­றது. மாவட்ட செயலாளரின் பங்களிப்புடன்அரசாங்க அதிகாரிகளையும் புத்திஜீவிகளையும் இணைத்து வழிநடத்தும் குழுவொன்று அமைக்கப்பட்டு அதன் மூலம் அந்நடவடிக்கை முன்னெடுக்கப்படுகிறது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தண்டனைச்சட்டக்கோவையின் 363, 364 ஆம் பிரிவுகளைத்...

2024-03-29 19:35:09
news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13