(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)
கொவிட்டில் மரணிப்பவர்களை அடக்கம் செய்யலாம் என தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ள விசேட வைத்திய குழுவின் பரிந்துரைகளை அரசாங்கம் நடைமுறைப்படுத்தவேண்டும். மாறாக தகனம் மாத்திரம் என சுகாதார அமைச்சரின் கூற்று மனிதாபிமனத்துக்கு விரோதமான தீர்மானமாகும் என எதிர்க்கட்சி உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் வியாழக்கழமை இடம்பெற்ற துறைமுகங்கள் மற்றும் விமான நிலைய அபிவிருத்தி அறவீட்டு சட்டத்தின் கீழான கட்டளைகள், உற்பத்தி வரி சட்டத்தின் கீழான கட்டளைகள், நிதிச் சட்டத்தின் கீழான கட்டளைகள், செயல் நுணுக்க அபிவிருத்தி கருத்திட்டங்கள் மற்றும் புலமைச்சொத்து திருத்த சட்டமூலங்கள் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,
கொவிட்டில் மரணிப்பவர்களின் இறுதுக்கிரியை தொடர்பில் அரசாங்கம் மாறுபட்ட கருத்துக்களை தெரிவித்து வருகின்றது. நாளுக்கு நாள் வேறுபட்ட தகவல்களை வெளியிடுகின்றனர்.
அடக்கம் செய்ய இடம் தேடுவதாக தெரிவிக்கப்பட்டது. அதேநேரம் கொவிட்டில் மரணிக்கும் முஸ்லிம்களின் சடலங்களை மாலைதீவுக்கு கொண்டு செல்ல அரசாங்கம் கதைத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இவ்வாறு மாறுபட்ட கருத்துக்களே தெரிவிக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் வைத்திய நிபுணர்களின் பரிந்துரைக்கமையவே அரசாங்கம் தீர்மானிக்கும் என தெரிவித்து வந்தது. தற்போது விசேட வைத்தியர்குழு அடக்கம் செய்யலாம் என தெரிவித்து பரிந்துரை செய்திருக்கின்றது.
ஆனால் அரசாங்கத்தின் சில அமைச்சர்கள், இதுதொடர்பில் அரசாங்கமே இறுதி முடிவு எடுக்கும், சுகாதாரத் துறை அல்ல என தெரிவித்திருக்கின்றனர்.
அரசாங்கத்தின் இந்த மாறுபட்ட நிலைப்பாட்டில் இருந்து விளங்கக்கிடைப்பது, யார் என்ன தெரிவித்தலும் முஸ்லிம்களின் ஜனாசாக்களை எரிப்பதே அரசாங்கத்தின் நிலைப்பாடாக இருக்கின்றது என்பதாகும்.
அதனால் 20ஆவது திருத்தத்துக்கு ஆதரவாக வாக்களித்த முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள், அரசாங்கத்தின் இந்த நிலைப்பாட்டுக்கு என்ன பதில் சொல்லப்போகின்றனர்.
இனவாதத்தை போஷிக்கும் இந்த அரசாங்கத்துக்கு வாக்களித்த இவர்கள் எதிர்காலத்தில் எவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொள்ளப்போகின்றனர் என்பதை மக்களுக்கு அறிவிக்கவேண்டும்.
எனவே கொவிட்டில் மரணிப்பவர்களை அடக்கம் செய்யலாம் என தெரிவித்து பரிந்துரை செய்திருக்கும் விசேட வைத்தியர் குழுவின் அறிக்கையை அரசாங்கம் மீண்டும் பரிசீலனை செய்து, மனிதாபிமான ரீதியில் தீர்மானம் எடுக்கவேண்டும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM