வவுனியா பட்டாணிச்சூரில் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், அக்கிராமம் முழுமையாக தனிமைப்படுத்தப்பட்டுள்ள நிலையில், அங்கு வசிக்கும் மக்களுக்கு உணவுத்தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக மக்கள் விசனமடைந்துள்ளதாக, வவுனியா நகர சபையின் உறுப்பினர்களான அப்துல் பாரி மற்றும் லரீப் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
தனிமைப்படுத்தப்பட்டுள்ள பிரதேசத்தின் நிலைமைகள் தொடர்பில் அவர்கள் மேலும் கருத்து தெரிவிக்கையில், எமது கிராமத்தில் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்ட நிலையில், கிராமம் திடீரென தனிமைப்படுத்தப்பட்டது.
அவ்வாறு தனிமைப்படுத்தப்பட்ட நிலையில், அங்குள்ள 900 இற்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்த 4,500 இற்கும் மேற்பட்டவர்கள் தற்போது உணவுத்தேவையை பூர்த்தி செய்ய முடியாதுள்ளனர்.
பிரதேச செயலக அதிகாரிகள் யாரும், எமது மக்களை பார்வையிடவில்லை. அவர்களுக்கான தேவைகள் குறித்தும் ஆராயவுமில்லை. குழந்தைகளுக்கு பால் மா மற்றும் வயோதிபர்களுக்கான உணவு, மருத்துவம் என்பவற்றிற்கு பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
எனவே தனிமைப்படுத்தப்பட்ட மக்களை மனிதாபிமானத்தோடு நோக்குங்கள் என அவர்கள் மேலும், தெரிவித்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM