சுதந்திர கட்சியினருக்கு அரசாங்கம் அநீதி இழைக்கவில்லை - சி. பி ரத்நாயக்க

Published By: Digital Desk 3

07 Jan, 2021 | 09:55 AM
image

(இராஜதுரை ஹஷான்)

கொவிட்-19 வைரஸ் தாக்கத்தினால் உயிரிழப்பவர்களின் உடல்  தகனம்   செய்வதற்கு எதிராக   கருத்துரைக்கும் அரசியல்வாதிகள் தங்களின் எதிர்கால அரசியல் இருப்பு குறித்து  அக்கறை கொண்டுள்ளார்கள்.

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியினருக்கு   அரசாங்கம் அநீதி இழைக்கவில்லை.  கூட்டணியில் உள்ள கருத்து முரண்பாடுகளுக்கு பேச்சுவார்த்தை  ஊடாக தீர்வை பெற்றுக்  கொள்ள   முடியும் என வனஜீவராசிகள் பாதுகாப்பு  அமைச்சர்  சி. பி ரத்நாயக்க தெரிவித்தார்.

இலங்கை மன்ற கல்லூரியில் நேற்று (06.01.2021) இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

கொவிட் -19 வைரஸ்  தாக்கத்தினால் உயிரிழப்பவர்களின் உடல் அடக்கம் செய்யலாம் என பொதுஜன பெரமுனவில் கூட்டணி அமைத்துள்ள  ஒரு சிலர் குறிப்பிடுகிறார்கள். இவர்கள் தங்களின் எதிர்கால அரசியல் இருப்பினை  கருத்திற்கொண்டே   இவ்வாறான கருத்துக்களை குறிப்பிடுகிறார்கள். கொவிட் விவகாரத்தில் அரசாங்கம் சுகாதார தரப்பினரது தீர்மானங்களுக்கு முன்னுரிமை வழங்கி  அவற்றை மாத்திரமே செயற்படுத்தும்.

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சிக்கு  பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கம்  அநீதி இழைக்கவில்லை. கூட்டணியாக செயற்படும் போது  கருத்து  முரண்பாடுகள்  தோற்றம் பெறுவது இயல்பு.  அனைத்து முரண்பாடுகளுக்கும் பேச்சுவார்த்தை ஊடாக தீர்வை பெற்றுக் கொள்ளலாம். அதனை விடுத்து  முறையற்ற வகையில் செயற்படுவது பொருத்தமற்றதாகும்.

கொவிட் -19 வைரஸ் தாக்கம்  இலங்கையில் மாத்திரம் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என  எதிர் தரப்பினர்  எண்ணி  பொருத்தமற்ற குற்றச்சாட்டுக்களை முன்வைக்கிறார்கள்.  இலங்கையில் மாத்திரம் பொருளாதாரம் வீழ்ச்சியடையவில்லை .  எம்மை காட்டிலும் பொருளாதாரத்தில் பலமிக்க நாடுகள்  பொருளாதாரத்தில் வீழ்ச்சிடைந்துள்ளன.    கொவிட் -19 வைரஸ் தாக்கத்தினால் பொருளாதாரம் மற்றும் சுகாதாரம் ஆகிய இரு பிரதான துறைகளுக்கும் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளன.

கொவிட்-19 வைரஸ் தாக்கத்துக்கு மத்தியில்  பொதுமக்களை பாதுகாத்து தேசிய பொருளாதாரத்தை மேம்படுத்த அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை ஆரம்பத்தில் இருந்து முன்னெடுத்துள்ளது. இதன் ஒரு கட்டமாகவே சுற்றுலாத்துறை சேவை கைத்தொழில் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளது.    

வெளிநாட்டு சுற்றுலா பிரயாணிகள் நாட்டுக்கு  அழைத்து  வருகையில் ஒரு சில குறைப்பாடுகள் காணப்பட்டன. அவை இனிவரும் காலங்களில் திருத்திக் கொள்ளப்படும். சுற்றுவலாத்துறை சேவையினை  கட்டியெழுப்ப  எடுத்த தீர்மானத்தில் எவ்வித மாற்றமும் கிடையாது. சுகாதார பாதுகாப்பு வழிமுறைகளுக்கு அமைய  சுற்றுலாத்துறை சேவை  முன்னெடுக்கப்படும்.

அடுத்த மாதமளவில் கொவிட்-19 தடுப்பூசியை பெற்றுக்  கொள்ள எதிர்பார்க்கப்பட்டுள்ளது.  நாட்டு மக்களின் சுகாதார பாதுகாப்பு குறித்து அரசாங்கம் உரிய கவனம் செலுத்தியுள்ளது.  அரசியல் நோக்கங்களை  கருத்திற் கொண்டு எதிர் தரப்பினர் முன்வைக்கும் குற்றச்சாட்டுக்களை நாட்டு மக்கள் ஏற்க மாட்டார்கள் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

4 முதல் 4.5 பில்லியன் டொலர்...

2024-04-17 01:41:44
news-image

புத்தாண்டு காலத்தில் நுகர்வோர் சட்டத்தை மீறிய...

2024-04-17 00:49:55
news-image

வைத்தியசாலை காவலாளிகள் மீது தாக்குதல் ஒருவர்...

2024-04-16 23:06:09
news-image

எழில் மிக்க நுவரெலியாவின் சுற்றுலா தொழில்...

2024-04-16 22:11:33
news-image

சர்வோதய இயக்க ஸ்தாபகர் ஆரியரத்ன காலமானார்!

2024-04-16 20:59:37
news-image

வெடுக்குநாறிமலை அட்டூழியம்! மனித உரிமைகள் ஆணைக்குழு...

2024-04-16 20:16:08
news-image

மின்சாரம் தாக்கி பாலித தேவரப்பெரும உயிரிழந்தார்!

2024-04-16 19:48:23
news-image

அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்தும் சாரதிகளுக்கு விசேட...

2024-04-16 19:16:12
news-image

நச்சுத் தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 505 பேர்...

2024-04-16 19:17:56
news-image

சாரதி உறங்கியதால் கிணற்றில் வீழ்ந்த ஆட்டோ...

2024-04-16 19:20:19
news-image

380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள்...

2024-04-16 17:51:28
news-image

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு...

2024-04-16 17:03:46