கொவிட்டில் மரணிப்பவர்களை அடக்கம் செய்ய அனுமதிக்க வேண்டும் - அதாவுல்லாஹ்

Published By: Digital Desk 4

06 Jan, 2021 | 08:52 PM
image

(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)

கொவிட்டில் மரணிப்பவர்களை தகனம் செய்யவேண்டும் என வெளியிடப்பட்டிருக்கும் வர்த்தமானி சட்டவிரோதமானதாகும்.

அதனை இரத்துச்செய்யவேண்டும். அரசாங்கத்தின் தீர்மானத்துக்கமைய அடக்கம் செய்யலாம் என வைத்தியர் குழுவினால் பரிந்துரை செய்யப்பட்டிருக்கும் வழிகாட்டலை நடைமுறைப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என ஆளுக்கட்சி உறுப்பினர் ஏ.எல்.எம். அதாவுல்லாஹ் தெரிவித்தார்.

ராஜபக்ஷவினர் மனிதாபிமானமுள்ளோர் என்கிறார் அதாவுல்லாஹ் | Virakesari.lk

பாராளுமன்றத்தில் இன்று புதன் கிழமை நீதி அமைச்சின் கீழ் உள்ள தண்டனைச்சட்டக்கோவை, பிணை மற்றும் சான்று (திருத்தச்) சட்டமூலம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

கொவிட் வைரஸ் தொடர்பில் ஆரம்ப கட்டத்தில் யாருக்கும் அதுதொடர்பில் தெளிவில்லாமல் இருந்தது. அதனால் மரணிப்பவர்களை அடக்கம் செய்யாமல் தகனம் செய்யவேண்டும் என வர்த்தமானி அறிவிப்பும் வெளியிடப்பட்டிருந்தது.

இதனால் முஸ்லிம் மக்களே பாதிக்கப்பட்டனர். என்றாலும் தற்போது இந்த வைரஸ் தொடர்பில் வைத்தியர்கள் அறிந்துவைத்திருக்கின்றனர்.

அதனால் கொவிட் காரணமாக மரணிக்கும் முஸ்லிம்களை அடக்கம் செய்ய அனுமதிக்கவேண்டும் என்ற கோரிக்கையை நாங்கள் ஜனாதிபதிக்கு முன்வைத்தோம்.

இது வைத்திய துறையுடன் சம்பந்தப்பட்டதால் அரசியல் ரீதியில் இதற்கு முடிவெடுக்காமல், இதுதொடர்பில் ஆராய்ந்து முடிவெடுக்க தலைசிறந்த வைத்தியர்குழுவொன்று அமைக்கப்பட்டது. 

தற்போது அந்த வைத்தியர் குழு கொரோனா வைரஸ் நீரில் பரவுகின்றதா, மரணிப்பவர்களை அடக்கம் செய்வதால் பாதிப்பு ஏற்படுமா என்பது தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பித்துருக்கின்றது. 

மேலும் கொவிட்டில் மரணிப்பவர்களை அடக்கம் செய்வது தொடர்பில் வைத்தியர்குழுவின் தீர்மானத்தின் பிரகாரமே நடவடிக்கை எடுக்கப்படும் என்பதே அரசாங்கத்தின் தீர்மானமாக இருந்தது.

அதன் பிரகாரம் தற்போது வைத்தியர்குழு கொவிட்டில் மரணிப்பவர்களை அடக்கம் செய்வதற்கு தேவையான வழிகாட்டல் அடங்கிய பரிந்துரையை அரசாங்கத்துக்கு சமர்ப்பித்திருக்கின்றது. அதன் பிரகாரம் விரைவில் அடக்குவதற்கான அனுமதியை அரசாங்கம் வழங்கவேண்டும்.

அத்துடன் வொவிட்டில் மரணிப்பவர்களை தகனம் செய்யவேண்டும் என தெரிவித்து வெளியிடப்பட்டிருக்கும் வர்த்தமானி அறிவிப்பு சட்டவிரோதமானதாகும். மரணிப்பவர்களை அடக்கும் உரிமை அரசியலமைப்பில் வழங்கப்பட்டிருக்கின்றது. அதனை மாற்றுவதாக இருந்தால் பாராளுமன்றத்தில் அதற்கான அனுமதியை பெற்றுக்கொள்ளவேண்டும். 

பாராளுமன்றத்தின் அனுமதி இல்லாமலே குறித்த வர்த்மானி அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கின்றது. அதனால் பாராளுமன்ற உறுப்பினர்களாகி நாங்கள் அனைவரும் ஒன்றிணைந்து குறித்த வர்த்தமானி அறிவிப்பை ரத்துச்செய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55