(செ.தேன்மொழி)
நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் நேற்று செவ்வாய்கிழமை இடம்பெற்ற வாகன விபத்துகளில் இளைஞர்கள் மூவர் உட்பட நால்வர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
பலாங்கொடை
பலாங்கொடை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பதுளை - கொழும்பு பிரதான வீதியில் பயணித்த லொறி ஒன்று அதே திசையில் சென்றுக் கொண்டிருந்த மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்துக்குள்ளானதில், மோட்டார் சைக்கிளில் சென்ற நபர் படுகாமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். பலாங்கொடையைச் சேர்ந்த 26 வயதுடைய இளைஞர் ஒருவர் இவ்வாறு உயிரிழந்துள்ளார். விபத்து தொடர்பில் லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
எல்பிட்டி
எல்பிட்டி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட எல்பிட்டி - அம்பலாங்கொட பிரதான வீதியில் மோட்டார் சைக்கிள் ஒன்று, அதே திசையில் சென்றுக் கொண்டிருந்த முச்சக்கர வண்டியுடன் மோதி விபத்து இடம்பெற்றுள்ளது. இதன்போது மோட்டார் சைக்கிளில் சென்ற நபர் படுகாமடைந்த நிலையில் எல்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். எல்பிட்டி, ஜயந்தி மாவத்தை பகுதியைச் சேர்ந்த 20 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். விபத்து தொடர்பில் முச்சக்கர வண்டியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
அங்குருவாதொட்ட
அங்குருவாதொட்ட பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹொரண - களுத்துறை பிரதான வீதியில் களுத்துறை நோக்கி சென்றுக் கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் பாதையில் சென்று கொண்டிருந்த பெண்ணொருவர் மீது மோதி விபத்து இடம்பெற்றுள்ளது. இதன்போது மோட்டார் சைக்கிளில் சென்ற நபர் படுகாமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். கல்பாத - பட்டகொட பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய இளைஞன் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
பொலன்னறுவை
பொலன்னறுவை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் நடைபாதையில் மோட்டார் சைக்கிளில் சென்ற போது நபரொருவர் அதனை கட்டுப்படுத்த முடியாமல் படுகாமடைந்துள்ளார். இதனைத் தொடர்ந்து குறித்த நபர் சிகிச்சைக்காக பொலன்னறுவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார். பொலன்னறுவை - கந்துருவெல பகுதியைச் சேர்ந்த 56 வயதுடைய நபரொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
விபத்துகள் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM