இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பி.சி.சி.ஐ) தலைவர் சவுரவ் கங்குலியின் உடல் நிலை தேர்ச்சி பெற்றுள்ளமையினால் நாளை அவர் வைத்தியசாலையிலிலிருந்து வெளியேறவுள்ளார்.
சவுரவ் கங்குலி முன்னதாக நேற்றைய தினம் வைத்தியசாலையிலிருந்து வெளியேறுவார் என கூறப்பட்டது.
எனினும் கங்குலிக்கு மேலும் சில பரிசோதனைகளை வைத்தியர்கள் முன்னெடுக்கவுள்ளமையினால் அவரின் வெளியேற்றத்தில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
ஆகவே அவர் மேலும் ஒரு நாள் வைத்தியசாலையில் தங்கியிருப்பார் என்று இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இலகுவான மாரடைப்பால் பாதிக்கப்பட்ட அவரது இதயத்துக்கு செல்லும் ரத்தக் குழாயில் மூன்று அடைப்புகளில் ஒன்று ஆஞ்சியோ பிளாஸ்டி சிகிச்சை மூலம் நீக்கப்பட்டது. அவரது உடல் நிலை குறித்து வைத்தியர்கள் குழுவினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
கடந்த ஜனவரி 02 ஆம் திகதி கொல்கத்தாவில் அமைந்துள்ள தனது வீட்டில் உடற்பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது மார்பு வலி, தலையின் கனம், வாந்தி மற்றும் தலைச்சுற்றல் போன்றவற்றினால் பாதிப்படைந்த நிலையில் கொல்கத்தா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM