இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரின் முடிவுக்கு முன்னதாக இங்கிலாந்து அணியினர் தாம் மேற்கொண்டுள்ள கொவிட்-19 பரிசோதனை முடிவுகளுக்காக தற்போது ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.
தற்போது ஹம்பாந்தோட்டையில் உள்ள சுற்றுலா ஹோட்டல் ஒன்றில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள 23 பேர் அடங்கிய இங்கிலாந்து அணியினர் பி.சி.ஆர். சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
அந்த பரிசோதனை முடிவுகள் இன்று வெளியாகும் என்று கூறப்படுகிறது.
ஞாயிற்றுக்கிழமை ஒரு பட்டாய விமானத்தில் மத்தள சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கிய இங்கிலாந்து அணியினரிடம் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில் சகலதுறை அட்டக்காரர் மொய்ன் அலி கொரோனா தொற்றுக்குள்ளாகியமை கண்டறியப்பட்டது.
அதனால் நாட்டில் தற்போதுள்ள தனிமைப்படுத்தப்பட்ட சட்டங்களின்படி, மொய்ன் அலி 10 நாட்கள் சுய தனிமைப்படுத்தலில் உள்ளார்.
இதனால் அவர் எதிர்வரும் 14 ஆம் திகதி ஆரம்பமாகும் முதல் டெஸ்ட் போட்டியை இழக்க நேரிடும்.
இது இவ்வாறிருக்க மொய்ன் அலியுடன் நெருக்கமான தொடர்புகளை பேணியதாகக் கூறப்படும் கிறிஸ் வோக்ஸ் 7 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.
இந்த சூழ்நிலையில், இங்கிலாந்து அணியின் அனைத்து வீரர்களும் அதிகாரிகளும் நேற்று தங்கள் இரண்டாவது பி.சி.ஆர். சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
அந்த முடிவுகள் இன்று வெளியாகும் என்று கூறப்பட்டுள்ள நிலையில் முடிவுக்காக காத்திருக்கின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM