பாலியல் பலாத்காரத்தில் ஈடுபடுவோரை பயங்கரவாதிகளை போல நடத்துவதுடன், அவர்களை பொது இடத்தில் வைத்து கொல்ல வேண்டும் என டெல்லி கலாசாரத் துறை அமைச்சர் கபில் மிஸ்ரா தெரிவித்துள்ளார்.
உத்தரப் பிரதேச மாநிலம், புலந்த்ஷகரில் சில தினங்களுக்கு முன் கொள்ளை குழுவினரால் தாய்-மகள் பாலியல் பலாத்காரத்துக்குட்பட்ட சம்பவத்தை சுட்டிக்காட்டி, கபில் மிஸ்ராவின் உத்தியோகப்பூர்வ முகப்புத்தக பதிவில் கூறியிருப்பதாவது:
தலைநகரில் கடந்த ஒரு ஆண்டில் மட்டும் 450 சிறுமிகள் பாலியல் பலாத்காரத்துக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர். மரண தண்டனை கூடாது என்ற கருத்தை நீண்ட காலமாக கொண்டிருந்தேன். ஆனால், இப்போது அதனை மாற்றிக் கொண்டுள்ளேன்.
பாலியல் பலாத்காரத்தில் ஈடுபடுவோர், பயங்கரவாதிகள் போன்றவர்கள். அவர்களை பொது இடத்தில் வைத்து கொலை செய்வதன் மூலம் யாரும் இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுவதை தடுக்க முடியும்.
பெண்களுக்கு ஆயுதங்களும், அதனை கையாளும் பயிற்சியும் வழங்கப்பட வேண்டும். தங்களை பாலியல் பலாத்காரத்துக்கு ஆளாக்கும் நபர்களை கொல்லும் உரிமையை பெண்களுக்கு வழங்க வேண்டும். இதற்காக ஒரு சிறப்புச் சட்டத்தை, பாராளுமன்றம் உருவாக்க வேண்டும்.
பாலியல் பலாத்கார குற்றங்களில் ஈடுபடுவோர் சிறுவராக இருந்தாலும் சரி, அவர்களை பெரியவர்களாக கருதி தண்டனை வழங்க வேண்டும். பாலியல் பலாத்காரத்தில் ஈடுபடுவோரின் முகத்தையோ, இதர விவரங்களையோ மூடி மறைப்பதை விட்டுவிட்டு, அவற்றை பகிரங்கப்படுத்த வேண்டும் என்று கபில் மிஸ்ரா கூறியுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM