Super Sevens ரக்பி சுற்றுப்போட்டி இம் மாதம் 5 ஆம் திகதி முதல் 6 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளதுடன் இரண்டாம் சுற்றுப் போட்டி இம்மாதம் 12 மற்றும் 13 ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ளது.
இலங்கை ரக்பி கழகம் 2016 ஆம் ஆண்டுக்கான போட்டித் தொடரை ஏற்பாடு செய்துள்ளது.
இப்போட்டிகள் அனைத்தும் கொழும்பு குதிரைப் பந்தயத்திடல் மைதானத்தில் இடம்பெறவுள்ளன.
எட்டுக் கழக அணிகள் இதில் பங்குபற்றவுள்ளதுடன் உள்நாட்டு விளையாட்டு வீரர்களுக்கு, உலகின் மிகச் சிறந்த விளையாட்டு வீரர்களுடன் சேர்ந்து விளையாடுவதற்கும் வாய்ப்புக் கிடைத்துள்ளது.
நியூசிலாந்து, அவுஸ்திரேலியா, பிஜி, சாமோ, டொங்கா மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளிலிருந்து பிரலமான ரக்பி வீரர்கள் இலங்கைக்கு வருகை தந்து இப்போட்டிகளில் கலந்துகொள்ளவுள்ளமை இந்த ஆண்டு போட்டியின் எதிர்பார்ப்பையும் பரபரப்பையும் அதிகரிக்கச் செய்துள்ளது.
ஒவ்வொரு அணியிலும் மூன்று வெளிநாட்டு வீரர்கள் விளையாடுவதற்கு அனுமதிக்கப்படுவார்கள். கழக சுற்றுப்போட்டியுடன் இணைந்ததாக பாடசாலைகள் மட்டத்தில் இடம்பெறும் சுற்றுப்போட்டியில் எட்டு பாடசாலை அணிகள் கலந்துகொள்ளவுள்ளன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM