பாகிஸ்தான் முன்னாள் மகளிர் கிரிக்கெட் அணியின் தலைவி சனா மிர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளார்.
கராச்சியில் நடைபெற்று வரம் காயிட்-இ-அசாம் கிண்ண இறுதிப் போட்டிக்கான பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் (பி.சி.பி) வர்ணனைக் குழுவில் இருந்த சனா மிர், போட்டியின் மூன்றாம் நாளில் காய்ச்சல் போன்ற அறிகுறிகளைக் காட்டிய பின்னர் கொவிட்-19 பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டார்.
அந்த பரிசோதனை முடிவுகளிலேயே அவர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை தெரியவந்துள்ளது.
இந் நிலையில் முழு போட்டிக்கான வர்னணைப் பணியில் ஈடுபட்ட வர்ணனையாளர்களும், சனா மீருடன் நெருங்கிய தொடர்பு கொண்டவர்களையும் கொவிட் பரிசோதனைகளுக்கு உட்படுமாறு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கேட்டுக் கொண்டுள்ளது.
35 வயதான சனா மிர் கடந்த ஆண்டு ஏப்ரல் 25 ஆம் திகதி சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றார். 2009 முதல் 2017 வரை பாகிஸ்தான் மகளிர் கிரிக்கெட் அணிக்கு தலைவராக சனா மிர் 226 சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ளார்.
பாகிஸ்தான் பந்துவீச்சு வரிசையில் ஒரு முக்கிய வீரராக இருந்த சனா மிர், 2018 ஒக்டோர் மாதத்தில் ஒருநாள் பந்துவீச்சாளர்களுக்கான ஐசிசி மகளிர் தரவரிசையில் முதலிடத்திற்கு முன்னேறியமையும் குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM